Thursday, July 31, 2008

வலைப்பக்கங்களில் அவ்வப்போது சில சுவாரஸ்யமான கட்டுரைகள் செய்திகள் வெளிவருகின்றன. அப்படி என் கவனத்தை கவர்ந்தது இக்கட்டுரை.
இன்னும் கிராமப்புறங்களில் காணப்படும் விசித்திர நடைமுறைகளில் ஒன்று மொய் பணம் தருவது. அதை பற்றிய சுவாரஸ்யமாக தகவல்களை தருகிறது இந்தக் கட்டுரை.

சின்ன கவுண்டர் படத்தில் இப்படியொரு மொய்விருந்து காட்சியிருக்கிறது. ஆனால் இவ்வளவு விபரமாக அதில் குறிப்பிடப்படவில்லை.
**

மொய்விருந்து


நம்வீட்டுத் திருமணத்தின்போது பணமாகவும் பொருளாகவும் மணமக்களுக்கு அன்பளிப்புகள் தரப்படுகிறதல்லவா?.............. அதை நமக்குக் கொடுத்தவர் பின்னொரு காலத்தில் அன்பளிப்புக்கு ஈடான ரொக்கப்பணத்தை திருப்பித் தருமாறு ஒரு அழைப்பிதழ்மூலமாக கேட்பார். அவர்கொடுக்கும் விருந்தை சாப்பிட்டுவிட்டு அவருக்குநாம் கொடுக்கவேண்டிய ரொக்கத்தைக்கொடுத்துவிட்டு வரவேண்டும்........ இதுதான் மொய்விருந்து!

அப்படிக்கொடுக்கும்போது இடைப்பட்ட காலத்திற்கு ஒரு வட்டித்தொகையையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். அந்த விருந்திற்கு நாம் போகமறந்தால் அல்லது மறுத்தால் கடிதம் மூலமாகவோ, ஆள்மூலமாகவோ அந்தப்பணம் நம்மிடமிருந்து வசூல் செய்யப்படும்.

புதுமையாக இருக்கிறதா? சமீபத்தில் மொய்விருந்து நடத்தியவருக்கு கிடைத்த மொய்ப்பணம் ஒருகோடிரூபாய் என்றால் நம்பமுடிகிறதா?.... 1967 ஆம் ஆண்டிற்குப்பிறகுதான் இந்த மொய்விருந்து நடைமுறை அதிகமாக காணப்படுகிறதாம்!

மொய்விருந்து நடைமுறையை ஆவணப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பதிவு செய்யப்படுகிறது. கூடுதல் விபரங்கள் தரப்பட்டால் இந்தப்பக்கம் திருத்தியமைக்கப்படும். எவரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை.

ஒரு தாத்தாவும், பாட்டியும்..........அவர்களுக்குப் பிள்ளையில்லை.
இதுவரை எத்தனையோ பேருக்கு மொய்ப்பணம் கொடுத்திருக்கிறார்கள். கொஞ்சகாலத்தில் மரணம் வந்துவிடும். மொய்ப்பணம் சும்மா போகலாமா?...

ஒரு பெரிய பந்தல் போட்டார்கள்....... தாத்தாவும் பாட்டியும் மொட்டை அடித்துக்கொண்டார்கள்.....பாட்டிக்கு சிறுவயதிலேயே காதுகுத்திவிட்டதால் பவுன் செலவு மிச்சம். தாத்தாமட்டும் காது குத்திக்கொண்டார். வருகிறவர்களுக்கு ஆட்டுக்கறியுடன் சோறுபோட்டு தங்களுக்கு வரவேண்டிய மொய்ப்பணத்தை திரும்பவும் வசூல் செய்து கொண்டனர். மொய் கொடுக்காதவர்களுடைய வீடுகளுக்கு ஆள் அனுப்பி பணத்தை வாங்கிவரச்செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளில் இன்றளவும் நடைமுறையில் இருந்துவரும் மொய்விருந்து பற்றிய தகவல்கள் சுவையானவை.

திருச்சிற்றம்பலம் தொடங்கி புதுக்கோட்டை மாவட்டம் சேந்தன்குடி வரையிலும்..........அப்புறம்.........நாடியம் தொடங்கி மேற்பனைக்காடு ....கீரமங்கலம் வரையிலும் மொய்விருந்து நடைமுறை மக்களிடம் இருந்துவருவதாக தெரிகிறது.

மொய்விருந்து அழைப்பிதழ்கள் படிக்கச்சுவையானவை.

நாடாங்காடு என்னும் ஊரில் நடை பெற்ற எனது நண்பர் ஒருவரின் திருமண அழைப்பிதழ் கண்டேன். அதில் 'முக்கியக்குறிப்பு' என்று போட்டு ' கடந்த 1986 ஆம் ஆண்டு முதல் எங்கள் வீட்டில் எந்த விசேஷமும் நடைபெறவில்லை என்பதை கவனத்தில் கொண்டு மொய் எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று ஒரு குறிப்பும் இருந்தது.

கல்யாணம், காதுகுத்து, பூப்புநீராட்டு போன்ற நிகழ்ச்சிகளின் போது மட்டுமல்ல, சைக்கிள் கடை துவக்கம், பெட்டிக்கடை துவக்கம் என்ற நிகழ்ச்சிகளின்போதும் கூட பத்திரிக்கை அடித்து மொய்வாங்கப்படுகிறது. மொய் வாங்கிக்கொள்வதற்காகவென்றே விருந்து நிகழ்ச்சி நடைபெறுவது இங்கே வழக்கமாக உள்ளது.

உங்கள் வீட்டிற்கு மொய்விருந்து பத்திரிக்கை வந்து சேர்ந்தவுடனேயே நீங்கள் செய்யவேண்டிய முதல் வேலை அந்த விருந்திற்கு நீங்கள் எத்தனை ரூபாய் மொய் செய்யவேண்டும் என்பதை கண்டுபிடிக்கவேண்டியது. அடுத்த வேலை அந்தப்பணத்தைத் திரட்ட அலைந்து திரியவேண்டியதுதான்........

1) மொய்விருந்து நடைபெறும் இடம் கல்யாண மண்டபமாகவோ, இதற்கென அமைக்கப்பட்ட கீற்றுக்கொட்டகையாகவோ இருக்கும். இதற்கென கீற்றுக்கொட்டகை அமைத்து வாடகைக்கு விடுகிறவர்களும் உண்டு.

2) மொய்விருந்து பந்தலின் ஒரு பகுதியில் ஐந்தாறு கவுண்டர்கள்......சினிமா கொட்டகை மாதிரி...... 'சேந்தன்குடி, மேற்பனைக்காடு, கீரமங்கலம் ஊரைச்சேர்ந்தவர்கள் இங்கே மொய்செலுத்தவும்' என்று இருக்கும். எந்த ஊரையும் சேராதவர்கள் 'பல ஊர்' என்ற கவுண்டரில் பணம் செலுத்த வேண்டும்.

3) உங்கள் வீட்டு விசேஷங்களின்போது தேங்காய், பூ, பழம், வெற்றிலை, என்று மரியாதை செய்திருப்பார்கள் இல்லையா?..... அதை 'தட்டு தாம்பாளம் வாங்கிக்கொள்ளப்படும்' என்று அழைப்பிதழில் குறிப்பிடுவார்கள்.

4) மூன்று நான்கு பேர்கள் கூட்டாகச்சேர்ந்து மொய்விருந்து நடத்துவது உண்டு. செலவினத்தை பகிர்ந்துகொள்வார்கள். வரவினத்தை தனித்தனியாக எழுதிக்கொள்வார்கள். இந்த பந்தல் பொதுப்பந்தல் என்று அழைக்கப்படும்.

5) பந்தலில் மணல் பரப்பியதரையில்தான் கறிவிருந்து.உள்ளூர் சலவைத்தொழிலாளி விரித்துப்போடும் சேலையில் வரிசை வரிசையாக அமர்ந்து கொள்ள வேண்டும்.


6) கையில் கொடுக்கப்படும் வாழை இலையை நாமே வாங்கி பரத்திவைத்துக்கொள்ளவேண்டும்.வடித்தசோறும் ஆட்டிறைச்சிக்குழம்பும் பரிமாறப்படும். இந்தக்குழம்பிற்கென்று தனிச்சுவை உண்டு. மிளகுக்காரம் தூக்கலாக இருப்பதால் வயிற்றுக்கு கேடில்லை.

7) ஒரேநாளில் பல மொய்விருந்துகளுக்கு பணம் போட்டுவிட்டு பலவீடுகளிலும் சாப்பிடுபவர்கள் உண்டு. எங்குமே சாப்பிடாமல் நொந்துபோய் வீட்டில் தண்ணீர் சோறும், பச்சை வெங்காயமும் சாப்பிடுபவர்களும் உண்டு.

8) காலமாற்றத்திற்கு ஏற்ப இப்போதெல்லாம் கோழிக்கறியும் சேர்த்துகொள்ளப்படுகிறது.

9) மிகச்சில விருந்துகள் மட்டும் சைவ விருந்துகள்.அசைவம் சாப்பிடாத மிகச்சிலருக்கு தனியாக சைவ உணவு வழங்கப்படும்.

10) மொய்ப்பணத்தை நோட்டில் வரவுவைக்கும் பணியில் மிகநெருங்கிய உறவினர்கள் மட்டுமே ஈடுபடுவார்கள்.

11) புத்தககூடுதலுக்கும், இருப்பு கூடுதலுக்கும் வித்தியாசம் ஏற்பட்டால் வரவுவைத்தவர் தான் அதை சொந்தப்பணத்தில் இருந்து ஈடு செய்யவேண்டும்.

12) விருந்து முடிந்தபிறகு தாமதமாக மொய்செய்பவர்களுக்கு 'பின்வரவு' என்று தனியாக பக்கம் திறக்கப்பட்டு எழுதப்படும். பின்வரவு செய்தவர்களுக்கு சமுதாயத்தில் மதிப்பு குறையும். ஏளனப்பேச்சிற்கு உட்படவேண்டியிருக்கும்.

13) 'நீ எனக்கு செய்த மொய் எல்லாம் ஏற்கனவே செய்தாகிவிட்டது. இது புது கணக்குப்பா.......' என்று வரும் பணம் 'புதுநடை' என்ற தலைப்பில் எழுதப்படும்.

14) அண்மைக்காலத்தில் எதிரியாகிப்போனவன் வீட்டில் மொய்விருந்து என்றால்கூட சேரவேண்டிய மொய்சேர்ந்துவிடும்.

15) குடும்பத்தகராறா?........இனிமேல் உறவுவேண்டாமா?......பஞ்சாயத்து செய்து உறவு அறுக்கப்படும்போது மொய்ப்பணமும் தீர்க்கப்படும்.

16) மொய்க்கணக்கிற்குள் சிக்கவிரும்பவில்லையா?......கூப்பிட்ட மரியாதைக்கும் சாப்பிட்ட மரியாதைக்கும் ஏதாவது செய்ய வேண்டுமா?.......வழி இருக்கிறது......"இதை எழுதவேண்டாம்" என்று கொடுத்தால் அதற்கும் ஒரு தலைப்பிட்டு எழுதிக்கொள்வார்கள். பத்து வருடங்களுக்குப்பிறகு நீங்கள் திருத்தணியில் இருந்தால் கூட உங்கள் வீட்டு விசேஷத்தின்போது வந்து நிற்பார்கள்.

17) ஒரு கிலோ ஆட்டிறைச்சி ஏழுபேரிலிருந்து பத்துபேர்வரை என்றகணக்கிற்குஆடுகள் வெட்டப்படும். எனக்குக் கிடைத்த தகவலின்படி ஒரு விருந்தில் 20,000 பேர்சாப்பிட்டார்களாம்.

18) பெரிய அளவில் விளம்பரம் செய்து மொய்விருந்து நடத்துவதற்கு முதலீடு தேவைப்படுமல்லவா?...........கவலைப்பட வேண்டியதில்லை.....உள்ளூரில் இருக்கும் அரசு வங்கிகளின் மேலாளர்களின் சொந்தப்பொறுப்பில் கடன் வழங்குவார்கள் .........விருந்து முடிந்த பிறகு ஒரு பெரிய தொகை அந்த வங்கியில் நிரந்தர முதலீடு செய்ய ஒப்புக்கொள்ள வேண்டும்.

19) ஒரே நாளில் ஒரே ஊரில் பலமொய்விருந்துகள் நடைபெறும்போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் பத்தாயிரக்கணக்கில் பணம் தேவைப்படும்.

இதற்காக அவர்கள் கடன்வாங்கி மொய்செய்வது அதிகரித்து வருகிறது. இந்தக்கடனை அடைப்பதற்காகவே பெரும்பாலோரின் மொய்விருந்து வசூல் பயன்படுகிறது என்கிற தகவல் சிந்திக்கக்கூடியது. இது போன்ற நிகழ்வுகளின் போது ஊர்பஞ்சாயத்துகூடி மொய்விருந்து எண்ணிக்கையை கட்டுப்படுத்தும்.
20) மொய்ப்பணத்தை தென்னந்தோப்பு, வாழைத்தோப்பு, நகரங்களில் புதிய வியாபாரம் தொடங்குதல், லேவாதேவி, புதிய பஸ்கள் வாங்குதல் என்றெல்லாம் முதலீடு செய்பவர்களும் இருக்கிறார்கள்.

பலகுடும்பங்களில் பொருளாதார ஏற்றத்திற்கும், பொருளாதார வீழ்ச்சிக்கும் இந்த மொய்விருந்துகள் காரணமாக அமைந்துள்ளன.

நன்றி: http://thanjavure.blogspot.com.
எனது வலைத்தளத்தை பார்வையிடும் பலரும் உலகசினிமாவில் எதைத் தேர்வு செய்து பார்ப்பது என்ற விபரத்தை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிலருக்கு தனிப்பட்ட மின்னஞ்சலில் விபரங்கள் அனுப்பிய போதும் இதே சந்தேகம் தொடர்வதால் தற்போது எனக்கு விருப்பமான நூறு படங்களின் பட்டியல் ஒன்றை வெளியிடுகிறேன். இவை மட்டுமே உலகத்திரைப்படங்கள் அல்ல.

இவை என் விருப்பத்தின் படி முக்கியமான நூறு திரைப்படங்கள்.
இதற்கு நான்கு வருசத்தின் முன்பாக உலகசினிமா புத்தக தயாரிப்பின் போது நூறு சிறந்த படங்களின் பட்டியல் ஒன்றை தயார் செய்தேன். இன்றுள்ள எனது பட்டியலோடு ஒப்பிடும் போது சில படங்கள் மாறியிருக்கின்றன. சில படங்கள் அப்படியே இருக்கின்றன. இந்த மாற்றங்கள் பெரிதும் என் ரசனை சார்ந்தது.

புதிதாக உலகசினிமாவைக் காண விரும்புகின்றவர்கள் இந்தப் பட்டியலில் உள்ள நூறுபடங்களை பார்த்து முடித்துவிட்டால் அநேகமாக உலகசினிமாவின் தேர்ந்த ரசிகர்களில் ஒருவராகிவிடுவீர்கள். இந்தப் படங்கள் இன்று எளிதில் கிடைக்கின்றன.

சென்னையில் பார்சன் காம்ப்ளெக்ஸ் ஜெமினி மேம்பாலம் அருகில் உள்ளது. இங்கேயுள்ள டிவிடி கடைகளில் கிடைக்கின்றன. அல்லது பிராட்வேயில் உள்ள பர்மா பஜார் சென்றால் அங்கும் கிடைக்க கூடும். அமேசான் இணைய தளத்திலும் இவை நேரடியாக வாங்குவதற்கு சாத்தியம் உள்ளது. அது போலவே பெரிய புத்தக கடைகள், இசைவிற்பனை நிலையங்களிலும் இந்தப் படங்களில் பல எளிதில் கிடைக்கின்றன.

இந்த பட்டியல் தரவரிசைப்பட்டியல் அல்ல. காலவரிசையான பட்டியலும் அல்ல. இவை நான் சிபாரிசு செய்யும் திரைப்படங்கள். இந்தப் படங்கள் தொடர்பான மேலதிகமான தகவல்களை பெற எனது உலகசினிமா மற்றும் அயல்சினிமா புத்தகங்கள் உதவக் கூடும்.

உலகசினிமா திருத்தப்பட்ட செம்மையான புதிய பதிப்பாக உயிர்மை பதிப்பகத்தில் அடுத்த மாதம் வெளியாகிறது. அயல்சினிமா உயிர்மை பதிப்பக வெளியீடாக தற்போது விற்பனையில் உள்ளது
**

The Best 100 Movies

La Strada - Federico Fellini

The Virgin Spring - Ingmar Bergman

Rashomon - Akira Kurosawa

The 400 Blows - Fran�ois Truffaut

The Bicycle Thief - Vittorio De Sica

Woman in the Dunes - Hiroshi Teshigahara

The Battle of Algiers - Gillo Pontecorvo

Ivan the Terrible - Sergei Eisenstein

Blow-Up - Michelangelo Antonioni

LAWRENCE OF ARABIA � David lean

Belle de Jour - Luis Bunuel

Breathless - Jean-Luc Godard

Knife in the Water � Roman polanski

Ugetsu Monogatari - Kenji Mizoguchi

Pickpocket - Robert Besson

Roman Holiday - William Wyler

Beauty and the Beast - Jean Cocteau

Tokyo Story - Yasujiro Ozu

The Gospel According to St. Matthew - Pier Paolo Pasolini

M - Fritz Lang

Ben-Hur - William Wyler

The Cranes Are Flying - Mikhail Kalatozov

Casablanca - Michael Curtiz

The Sound of Music - Robert Wise

It's a Wonderful Life - Frank Capra

Modern Times - Charles Chaplin

The Passion of Joan of Arc - Carl Theodor Dreyer

The Psycho - Alfred Hitchcock

High Noon - Fred Zinnemann

Citizen Kane - Orson Welles

Once Upon a Time in West � Sergio Leone

Barry Lyndon - Stanley Kubrick

Reds - Warren Beatty

Stagecoach - John Ford

Judgment at Nuremberg - Stanley Kramer

Butch Cassidy and the Sundance Kid - George Roy Hill

Panther Panchali - Satyajit Ray

Meghe Dhaka Tara - Ritwik Ghatak

Ivan`s Childhood - Andrei Tarkovsky

Aguirre, the Wrath of God - Werner Herzog

Three colours - Krzysztof Kieslowski

Ballad of a Soldier - Grigori Chukhrai

Mephisto- Istv�n Szab�

Landscape in the Mist - Theo Angelopoulos

The Godfather - Francis Ford Coppola

Taxi Driver - Martin Scorsese

All That Jazz- Bob Fosse

The Ballad of Narayama - Shohei Imamura

The Shawshank Redemption - Frank Darabont

Amadeus - Milos Forman

The Last Emperor - Bernardo Bertolucci

Annie Hall � Woody Allen

Rabbit-Proof Fence - Phillip Noyce

The Piano - Jane Campion

THE KING OF MASKS - Wu Tianming

Run Lola Run- Tom Tykwer

The Colour Purple - Steven Spielberg

The Mission - Roland Joff�

In the Mood for Love - Wong Kar-Wai

Children of Heaven � Majid Majidi

Spring, Summer, Autumn, Winter... and Spring � kim ki duk

Forrest Gump -Robert Zemeckis

Cinema Paradiso - Giuseppe Tornatore

Amores perros - Alejandro Gonz�lez I��rritu

BONNIE AND CLYDE - Arthur Penn

No Man's Land - Danis Tanovic

The Killing Fields � Roland Joff�

West Side Story - Jerome Robbins

Farewell My Concubine - Chen Kaige

Raise the Red Lantern - Zhang Yimou

Cyrano de Bergerac - Jean-Paul Rappeneau

Fantasia � Disney

Spirited Away - Hayao Miyazaki

The Postman (Il Postino) - Michael Radford.

Scarface - Brian De Palma

Titanic � James Cameron

The Scent of Green Papaya - Trần Anh H�ng

Prisoner of the Mountains - Sergei Bodrov

Kolya - Jan Svěr�k

The Thief - Pavel Chukhraj

Pulp Fiction- Quentin Tarantino

Life Is Beautiful - Roberto Benigni

The Return - Andrei Zvyagintsev

Central Station - Walter Salles

Tsotsi - Gavin Hood

Downfall - Oliver Hirschbiegel

The Chorus - Christophe Barratier

Am�lie - Jean-Pierre Jeunet

Good Bye, Lenin- Wolfgang Becker

Moolaad�- Ousmane Sembene

All About My Mother - Pedro Almod�var

Dancer in the Dark - Lars von Trier

Gabbeh - Mohsen Makhmalbaf

The Son's Room - Nanni Moretti

City of God - Fernando Meirelles

'Chi-hwa-seon �( Painted Fire)- Im Kwon-taek

Hotel Rwanda- Terry George

Three Seasons - Tony Bui

March of the Penguins- Luc Jacquet

The Counterfeiters - Stefan Ruzowitzky
****
சாலை திறந்து கிடக்கிறது.

சாலையின் நடுவே எங்காவது பழுதடைந்து போன பைக் , கார் அல்லது பேருந்தின் காரணமாக கைவிரல்களை உயர்த்திக்காட்டி லிப்ட் கேட்பவர்களை கண்டிருக்கிறீர்களா?

நம்மில் வெகுசிலரே அவர்களுக்கு உதவி செய்திருப்போம். மற்றவர்கள் நமது வாகனத்தில் எதற்கு தெரியாத மனிதர் என்று திரும்பிக் கூட பார்ப்பதில்லை. . அரிதாக சிலர் தங்களது வாகனங்களில் வழிப்பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்வார்கள்.

அப்படி சாலையில் மாட்டிக் கொண்டு உதவி வாகனத்தை பிடித்து ஒரு இடம் விட்டு மற்றொரு இடம் வந்த பல அனுபவங்கள் எனக்கு நேர்ந்திருக்கிறது.பைக், டிராக்டர், லாரி, ராணுவத்திற்கு சொந்தமான ஜீப் என்று அறியாத மனிதர்களின் தயவில் கடந்து வந்திருக்கிறேன்.
பெரும்பான்மையினருக்கு பயணம் என்பது எவ்விதமான சிறு தடங்கலும் இல்லாமல் எல்லாமே முன்கூட்டி முடிவு செய்யப்பட்டு இருக்கை வசதி துவங்கி வழியில் சாப்பிடும் வாழைப்பழம் வரை யாவும் முறையாக இருக்க வேண்டும் . அந்த ஒழுங்கில் எங்கே சிறு தவறு நேர்ந்தாலும் பதற்றம் அடைந்து போய்விடுகிறார்கள். இப்போது செல்போன்கள் வந்தபிறகு பயணத்தில் ஏறிய இடம் துவங்கி வந்திறங்கும் இடம்வரை பேசிக் கொண்டேயிருக்கிறார்கள்.

ஒரு முறை ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள திருச்சுழி என்ற ஊரின் அருகே இரவில் பேருந்து பயணத்தில் பழுது ஏற்பட்டது. இருட்டிற்குள்ளாகவே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்து கிடந்தோம்

அந்தப் பகுதியில் வேறு பேருந்து கிடைக்காது என்பதால் நடக்கும் வரை நடந்து செல்லலாம். எங்காவது வேறு வாகனம் கிடைத்தால் போய்விடலாம் இல்லாவிட்டால் பழுது நீக்கபட்டு வரும் பேருந்திலே ஏறிச்செல்லலாம் என்று அறிவித்த போது உடன் வருவதற்கு நாலு பேரே முன்வந்தார்கள். நாலு பேரும் இரவில் நீண்ட சாலையில் நடக்கத் துவங்கினோம்.

அநேகமாக விடிகாலை வரை நடந்திருப்போம். வேறு வாகனங்களே வரவில்லை. எதற்காக இப்படி நடக்கிறோம் என்று எவருக்கும் தோன்றவில்லை. ஆனால் லேசான குளிரும் புளியமரங்கள் அடர்ந்த சாலையில் கசியும் மணமும் ஆகாசத்தின் மென்னொளியும், இராப்பூச்சிகளின் சப்தமும் நடையைச் சோர்வடையாமல் செய்தது. அன்றிரவு தொலைதூர கிராமங்களின் மீது எப்போதும் மறையாத வெளிச்சம் ஒன்று பரவியிருப்பதை கண்டேன். அந்த காட்சி இன்றும் என் கண்ணில் படிந்திருக்கிறது.
ஆனால் நான் அறிந்தவரை எவரும் விரும்பி சாலையில் எதிர்படும் எவராவது தன்னை ஏற்றிக் கொண்டு செல்வார்கள் என்று மட்டுமே நம்பி பயணம் மேற்கொள்வதில்லை.

கையில் காசிருந்து முறையாக பயணம் செய்யும் போதே ஆயிரம் தடுமாற்றங்கள் அசௌகரியங்கள் ஏற்படுகின்றன என்று புலம்பும் மக்களின் நடுவில் தன் கையிலிருந்து பயணத்திற்காக ஐந்து பைசா கூட செலவு செய்யாமல் ஒரு மனிதன் உலகம் முழுவதையும் கடந்து வந்திருக்கிறான் என்ற செய்தி நிச்சயம் நிஜம் என்றே நம்ப முடியாதது தான்
ஆனால் இது உண்மை. பிரெஞ்சு தேசத்தை சேர்ந்த லுடோவிக் ஹப்ளர் (Ludovic Hubler ) என்ற இருபத்தைந்து வயது இளைஞன் சாலையில் எதிர்படும் வாகனங்களிடம் உதவி கேட்டு மட்டுமே பயணம் செய்வது என்று முடிவு செய்து கிட்டதட்ட 1700000 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து சென்றிருக்கிறான். அதுவும் 59 நாடுகள் 1825 நாட்கள் கார்கள், டிரக், ஒட்டகம், கழுதை சவாரி, படகு என்று தன்னை கடந்து செல்லும் எந்த வாகனமாக இருந்தாலும் நிறுத்தி உதவி கேட்டு உலகைச் சுற்றியிருக்கிறான்.
காசிருந்தால் மட்டுமே பயணம் செல்லமுடியும் என்பதைத் தாண்டி அடுத்த மனிதர்களின் மீது உள்ள நம்பிக்கையாலும் உலகைச் சுற்றிவர முடியும் என்பதற்கு சான்று லுடோவிக்.

இவனது உலகப்பயணத்தை சாத்தியமாக்கியவர்கள் 1300 வாகன ஒட்டிகள். அவர்கள் சாலையில் நின்றபடியே விரலை உயர்த்தி வழிப்பயண உதவி கேட்ட லுடோவிக்கிற்கு உதவி செய்திருக்கிறார்கள். சில வாகனங்களில் இருநூறு முதல் ஐநூறு கிலோ மீட்டர வரை பயணம் செய்திருக்கிறான்.
பனி மூடிய சாலையில் குளிருடன் நடுங்கியபடியே யாராவது ஒருவர் தனக்கு லிப்ட் கொடுக்கமாட்டார்களா என்று 26 மணி நேரத்திற்கும் அதிகமாக ஒரு முறை காத்திருந்திருக்கிறான். அதைத் தவிர அவனது பயணத்தில் உதவ முன்வந்த பெரும்பான்மையினர் எளிமையான , அடித்தட்டை சேர்ந்த காரோட்டிகளே. அவர்கள் தங்களால் முடிந்த அளவான தூரத்திற்கு லுடோவிக்கை வாகனத்தில் கொண்டு இறக்கிவிட்டிருக்கிறார்கள்
2003ம் ஆண்டின் புத்தாண்டு கொண்டாட்டம் துவங்கிய போது தன் நண்பர்களோடு ஆல்ப்ஸ் மலையில் இருந்து தனது உலகப்பயணத்திற்கான முதலடியை லுடோவிக் துவங்கினான். அப்போது வயது 25.
பயணத்திற்காக கையிலிருந்து செலவு செய்யாமலே உலகைச் சுற்றி வர வேண்டும் என்று நீண்ட நாட்களாகவே கனவு கண்டு கொண்டிருந்த லுடோவிற்கிற்கு வழிச்செலவிற்கு தேவையான பணத்தை சேமிக்க சில வருடங்களாகி போனது. சாப்பிடுவதற்கும் தங்குவதற்கும் அடிப்படையாக நாள் ஒன்றுக்கு பத்து டாலர் செலவு செய்வது என்ற முடிவுடன் தனது பயணத்தை துவக்கினான்.

ஆல்ப்ஸ் மலையில் பயணம் துவங்கும் போதே எந்த காரணத்தை முன்னிட்டு தனது சொந்த செலவில் எந்த வாகனத்திலும் செய்ய கூடாது. அது போலவே தான் மேற்கொள்ளும் இலவசப்பயணங்கள் உத்தேசித்துள்ள நகரின் வழியில் உள்ள பெட்ரோல் பங்க் வரை மட்டும் தான். அதன் பிறகு இன்னொரு வாகனத்தை நாடி செல்ல வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு அதற்காக தன் பயணத்தை துவக்கியிருக்கிறான்.
2003 ம் ஆண்டின் புத்தாண்டு இரவில் சாலையில் நின்றபடியே லிப்ட் கேட்டபோது முதலாக அவரை தன்னுடைய வாகனத்தில் ஏற்றிக் கொண்டவர் இது சாத்தியமில்லை என்று சிரித்தபடியே அவரை பனியில் இறக்கிவிட்டு சென்றிருக்கிறார்.

நண்பர்கள் குடும்பம் யாவும் துறந்து பெயரற்ற ஒரு சாலையில் நின்ற போது தான் இனி வீடு திரும்ப முடியுமா என்ற சந்தேகம் லுடோவிற்கு உண்டானது. ஆனாலும் உலகை நோக்கி சாலை திறந்து கிடக்கிறது. செல்வதற்கு தேவையான மனத்துணிச்சல் மட்டுமே நமக்கு வேண்டும் என்ற உறுதியோடு அடுத்த வாகனத்தின் வருகைக்காக காத்திருக்கிறான்.

தனது இந்த பயணத்தின் போது வாழ்க்கையை நேரடியாக அருகில் இருந்து கற்று கொண்டதாக சொல்லும் லுடோவிக் பெரும்பான்மை மனிதர்களுக்கு அடுத்தவர் மீதான நம்பிக்கை குறைந்து போய்விட்டது. சாலையில் கடந்து செல்லும் வாகனங்களில் எண்பது சதவீதம் வழியில் நிற்கும் மனிதனை கண்டு கொள்வதில்லை. தான் சாலையில் உதவிகேட்டு நிற்பதை அறிந்தும் ஒரு லட்சத்துக்கு அதிகமான வாகனங்கள் அலட்சியமாக கடந்து போயிருக்கின்றன.

அதற்கு முக்கிய காரணம் பயம். அது ஒருவகையில் உண்மையும் கூட. வழிப்பறி கொலை கொள்ளை யாவும் சாலையில் தான் அதிகமாக நடக்கிறது. ஆனால் அதையும் தாண்டி அறியாத மனிதர்களுக்காக உதவி செய்ய வருகின்றவர்கள் தொழிலாளர்கள், ஏழ்மையான மனிதர்கள். அவர்கள் பல நேரங்களில் தங்குமிடம் மற்றும் உணவு தந்து லுடோவிக்கை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்
தனது பயணத்தை வெறும் சாகசபயணமாக மட்டுமே கொள்ளாமல் தான் கடந்து செல்லும் வழியில் உள்ள பள்ளி கல்லூரி மற்றும் தன்னார்வ நிறுவனங்களில் உலக சமாதானம் மற்றும் அன்பு குறித்து தான் கண்ட தெரிந்த செய்திகளை பகிர்ந்து கொண்டிருக்கிறான் லுட்விக்
அவன் நினைத்தது போல பயணம் எளிமையானதாக இல்லை. சில இடங்களில் கால் கடுக்க நாள் முழுவதும் நின்று கொண்டேயிருந்தால் ஏதாவது ஒரு வாகனம் நிறுத்தப்படும். ஆனால் அவர்கள் எளிதில் வாகனத்தில் ஏற்றிக் கொள்ள மாட்டார்கள். அத்தோடு அவர்களின் மொழி தெரியாத காரணத்தால் உரையாடவும் முடியாது.

இதற்காகவே தன்னை பற்றிய குறிப்புகளை ஒரு அட்டையில் பலமொழிகளில் எழதி அதை நீட்டி காட்டுவது அவனது வழக்கம். அப்படியும் நம்ப மறுப்பார்கள். ஒரு வாகன ஒட்டி அவனை வண்டியில் ஏற்றி கொண்டு வாகனமே கிடைக்காத சாலை ஒன்றில் வேண்டும் என்றே கொண்டு போய்விட்டுவிட்டு சென்று விட்டான். அங்கிருந்து நெடுஞ்சாலையை நோக்கி நடந்து வந்து ஒரு வாகனத்தை பிடிக்க இருபத்திரெண்டு மணி நேரமாகியிருந்திருக்கிறது. வழியில் சாப்பாடு தண்ணீர் கூட கிடையாது.
தனது ஐந்தாண்டு பயணத்தில் வாகனத்தில் பயணம் செய்த நேரத்தை விடவும் அதற்காக காத்திருந்த நேரமே அதிகம் என்று குறிப்பிடும் ஹெப்ளர் ஆங்காங்கே 450 இடங்களில் தங்கியிருக்கிறான். சில இடங்களில் போலீசாரிடம், ராணுவத்திடம் பிடிபட்டிருக்கிறார். இரவுக்காவல் என்று சிறைச்சாலைகளில் தங்க வைக்கபட்டிருக்கிறான். சில இடங்களில் வேறு வழியில்லாமல் பெண்களை போல பர்தா அணிந்து கொண்டு உதவி கேட்டு பயணம் செய்திருக்கிறான்.

இந்தப் பயணத்தின் ஒருபகுதியாக இந்தியாவிற்கு வருகை தந்து டெல்லி பனாரஸ் கல்கத்தா மும்பை பெங்களுர் என்று சுற்றியலைந்து திரும்பியிருக்கிறான். இந்தியாவை பற்றிய தனது பதிவுகளில் காந்தியின் மீதான ஈர்ப்பு. அதிகமான மக்கள் ஆங்கிலத்தை எளிதில் புரிந்து கொள்வது. தன்னார்வ நிறுவனங்களின் செயல்பாடுகள் மிக ஆரோக்கியமாக உள்ளன என்று பாராட்டுவதுடன் இங்குள்ள மாறுபட்ட கலாச்சாரங்களின் மீதான வியப்பும் இந்திய இசை மற்றும் திரைப்படங்கள் உணவு மீது உள்ள ஆர்வத்தையும் வெளிப்படுத்துகிறார்.

இந்தியாவில் தனக்கு பிடிக்காத பத்து விஷயங்கள் என்று இவர் பட்டியல் இட்டுள்ளது மிக முக்கியமான ஒன்றாகும்.

1) இந்தியாவெங்கும் நிரம்பியுள்ள குப்பைகள். : நகரங்கள் வீதிகள் வீடுகள் என்று எல்லா பொது இடங்களிலும் குப்பைகள் நிரம்பி வழிகின்றன. சாலைகளில் கால் வைக்கமுடியாத நிலை உள்ளது. குப்பை குறித்த விழிப்புணர்வு முற்றிலும் இந்தியாவில் இல்லை

2) சுயநலம்.: எண்பது சதவீத இந்தியர்கள் ரயிலில் டிக்கெட் எடுப்பதில் துவங்கி அன்றாட சின்னஞ்சிறு காரியங்கள் வரை அடுத்த மனிதர்களை பற்றி எவ்விதமான அக்கறையும் இன்றியே செயல்படுகிறார்கள். சுயநலம் என்பது மிதமிஞ்சியும், அடுத்தவர்களை சகிக்க முடியாத அளவிலும் காணப்படுகிறது

3) நன்றி தெரிவிக்க மறுப்பது - யாரும் யாருக்கும் எந்த நிலையிலும் நன்றி சொல்லிக் கொள்வதில்லை. ப்ளீஷ் தேங்க்ஸ் என்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறவர்கள் சொற்பமே.

4) புரியாத விஷயங்கள் : எதற்காக மக்கள் இவ்வளவு சப்தமாக செல்போனில் பேசுகிறார்கள். திரை அரங்கங்களில் வந்த பிறகும் ஏன் மக்கள் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். பொது இடங்களில் மூத்திரம் பெய்வது, எச்சில் துப்புவது.காரை நிறுத்துவது என்ற பழக்கம் ஏன் யாரையும் பாதிப்பதில்லை. காரணமில்லாமல் மற்றவர்கள் மீது எரிந்து விழுவது, சின்னஞ்சிறு விஷயங்களில் கூட ஏமாற்றுவது என்பது ஏன் என்றே புரியவில்லை

5) எதுவும் எளிதில் கிடைப்பதில்லை.: இந்தியாவில் எதுவும் எளிதில் கிடைப்பதில்லை. எல்லா இடங்களிலும் தள்ளுமுள்ளு, போன் பேச சென்றால் அது வேலை செய்யாது. இன்டர்நெட் மையங்களுக்கு சென்றால் அது முறையாக இருக்காது. இருந்தால் அவர்கள் கேட்கும் பணம் மிக அதிகமாகயிருக்கும். இது போலவே உணவகம் தங்குமிடம் பயணம் என்று எதிலும் எவ்விதமான ஒழுங்கும் முறைமையும் இருப்பதில்லை

6) சாதி : எல்லா மாநிலங்களிலும் சாதி முக்கியமான பிரச்சனை. யாரை சந்திக்க சென்றாலும் சாதியை பற்றி பேசுகிறார்கள். சாதியின் பெயரால் ஏற்படும் அதிகாரம் சச்சரவுகள் நீக்கமற்று உள்ளது

7) ஏமாற்றிவிடலாம் என்ற எண்ணம் : நண்பனே, சகோதரனே என்று அன்பு ஒழுக அழைத்து உபசாரம் செய்த போது அடிமனதில் இவன் வெளிநாட்டுக்காரன் இவனை எப்படியாவது ஏமாற்றிவிடலாம் என்ற எண்ணம் பெரும்பான்மையினருக்கு உள்ளது. வெளிநாட்டுபயணிகளை பணம் காய்க்கும் மரமாகவே கருதுகிறார்கள்.

8) லஞ்சம் ஊழல் : பள்ளிபடிப்பில் துவங்கி கடவு சீட்டுவாங்குவது வரை எல்லாவற்றிலும் நீக்கமற லஞ்சம் உள்ளது. லஞ்சம் கொடுப்பது வாங்குவது பற்றி எவ்விதமான குற்றவுணர்வும் எவருக்கும் கிடையாது

9) பொது வெளிகள் : கோவில்களை தவிர வேறு பொது வெளிகள் கிடையாது. மக்கள் ஒருவரோடு மற்றவர் சந்தித்து பேசி கொண்டாடி மகிழ கலச்சார வெளிகள் கிடையாது. நடன அரங்கம், மதுவிடுதிகள் போன்றவை தடைசெய்யபட்ட பகுதி போன்றவை. மக்கள் சேர்ந்து ஒன்றாக பகிர்ந்து கொண்டாடுவது என்ற வாரஇறுதி கொண்டாட்டங்கள் இந்தியாவில் மிக அரிது

10) இன்றும் மக்கள் : ஏழ்மை வறுமை அரசியல் பாகுபாடு என்று பல்வேறு பிரச்சனைகள் பல லட்சம் மக்கள் இன்றும் கல்வி கற்ற வசதியற்று உள்ளார்கள். கோவில்கள் மிக முக்கிய வணிக மையமாகிவிட்டிருக்கிறது.

தனது பயணத்தில் திபெத்திற்கு சென்று தலாய் லாமாவை சந்தித்தது மிகமுக்கிய நிகழ்வு என்று சொல்லும் ஹப்ளர் இதற்காக ஒரு ஆண்டு காத்திருக்க வேண்டியிருந்திருக்கிறது. தலாய் லாமாவை சந்திப்பதற்கான நேரம் கேட்டு ஒரு ஆண்டு தொடர்ந்து மின்னஞ்சல் அனுப்பி காத்திருந்து பயன் இல்லாமல் திபெத்திற்குள் பயணம் செய்திருக்கிறார். திபெத்தில் முறையான வாகனங்களின் வழியே பயணம் செல்லாமல் வழிப்பயணியாக யாராவது உள்ளே நுழைந்தால் அவர்கள் உடனடியாக பிடிக்கபட்டு சிறையில் அடைக்கபட்டுவிடுவார்கள் என்பது சட்டம். ஆகவே திபெத்திற்கு எப்படி போவது என்று தடுமாறி போயிருக்கிறான்.

தனது மனவுறுதியின்படியே ஒவ்வொரு இடமாக உதவி கேட்டு திபெத் எல்லை வரை சென்ற போதும் அவர் முறையான வாகனத்தில் வரவில்லை என்று தங்குமிடம் மறுக்கபட்டிருக்கிறது. தெரிந்த இடத்தில் தங்கி நேரடியாக தலாய்லாமாவின் காரியதரிசியை சந்தித்து விளக்கியபிறகு அவனுக்கு அனுமதி வழங்கபட்டிருக்கிறது. மூன்று நிமிச நேரம் தலாய் லாமை சந்தித்து பேசியிருக்கிறான்.

இந்தச் சந்திப்பிற்காக திபெத் எல்லையில் காத்திருந்த போது திபெத்திலிருந்து புனித யாத்திரை செல்லும் மக்களை சந்தித்திருக்கிறான். அவர்கள் இமயமலையை நோக்கி வரையான 2000 மைல் தூரத்தை நடந்தே கடக்க கூடியவர்கள். அப்படி நடக்கும் போது ஒவ்வொரு அடி எடுத்து வைத்தபிறகும் தலையால் பூமியை தொட்டு வணங்கி தன்னை ஆசிர்வதிக்கும்படியாக வேண்டிக் கொண்டே நடக்கிறார்கள். அதனால் ஒரு மனிதன் இந்த பயணத்திற்குள் பல்லாயிரம் தடவை பூமியை தனது தலையால் தொட்டு வணங்கியிருப்பான். அது தான் புனித பயணத்தின் உன்னதம் என்று விவரிக்கிறான்

பாகிஸ்தானிற்குள் நுழைவதற்காக அனுமதி கிடைக்காத போது அவனை பிரெஞ்சு தூதரகம் திரும்பி செல்லும்படியாக வற்புறுத்தியிருக்கிறது. ஆனால் தொடர்ந்து காத்திருந்து அனுமதி வாங்கி உள்ளே சென்றிருக்கிறான். ஆப்கான், பாகிஸ்தான் பற்றிய பொது அபிப்ராயங்கள் யாவும் தவறானவை. அங்கும் மக்கள் உலகமெங்கும் உள்ளவர்களை போலவே அன்புடன் நடத்துகிறார்கள். வறுமையும் ஏழ்மையும் நிரம்பியிருக்கின்றன. ஊடகங்கள் உருவாக்கும் பொய்களை தாண்டிய நிஜத்தை நேரடியாக கண்டேன் என்கிறான் லுட்விக். அதே நேரம் வன்முறை, தீவிரவாதம் அடிப்படைவாதம் போன்றவற்றால் எளிய மக்கள் எந்த அளவு உயிரிழப்பும் பயமும் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் வலியுறுத்துகிறான்.

உலகெங்கும் அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் லட்சக்கணக்கில் மக்கள் இன்றும் அவதிப்படுகிறார்கள் அது தான் தன் பயணத்தில் கண்ட முக்கிய உண்மை என்று சொல்லும் ஹப்ளர் எந்த ஒரு சிறு பொருளையும் வாங்கும் போது இது நமக்கு எளிதாக கிடைக்கிறது ஆனால் இது கிடைக்காதவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற எண்ணம் மனதில் இப்போது உருவாகிறது. இந்த எண்ணத்திற்கு காரணம் உலகப்பயணம் தான் என்கிறார்

ஐந்தாண்டு காலம் உலகம் சுற்றி முடிந்து திரும்பி ஹப்ளரிடம் தனது பயணத்தை பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று பத்திரிக்கையாளர்கள் கேட்ட போது அவன் சொன்ன ஒரே வார்த்தை

Never Again .

சகமனிதனை நம்பி துவங்கிய பயணம் வெற்றிகரமாகவே நடந்தேறியிருக்கிறது. உண்மையில் உலகம் முழுவதும் சாலைகள் திறந்துகிடக்கின்றன. அதை நோக்கி செல்லும் மனத்துணிவும் அடுத்த மனிதர்கள் மீது மெய்யான அக்கறையும் இருந்தால் உலகம் சுற்றுவது எளிதானதே.

அதற்கு மொழியோ, பொருளாதார காரணங்களோ தடையில்லை. சரித்திர கால சாகசபயணிகளாக யுவான்சுவாங், பாஹியான் பற்றி வாசிக்கையில் சிலிர்ப்பு கொள்ளும் நாம் அருகாமையில் உள்ள அறியாத இடங்களை நோக்கி பயணம்செய்யவே தயங்குகிறோம்.
எல்லா பயணங்களும் வலிகளும் வேதனைகளும் அவமானங்களும் நிரம்பியதே. அந்த வலியை தாண்டி பயணம் நமக்குள் உருவாக்கும் அக சந்தோஷம், உலகில் பலரும் கண்டிராத இயற்கை காட்சிகள், மனிதமுகங்கள், கொண்டாட்டங்கள் என்று நீளும் நினைவுகள் தான் பயணம் தரும் சந்தோஷம். அதற்காகவே பயணம் செய்யலாம்.
***

Saturday, July 26, 2008

அமெரிக்க அணு ஒப்பந்தம் வேண்டாம் - அணு விஞ்ஞானிகள் கூட்டறிக்கை
A.கோபால கிருஷ்னன், A.N.பிரசாத், P.K.ஐயங்கார்.


நாங்கள் மூத்த அணு விஞ்ஞானிகள் பலர் அடங்கிய குழுவைச் சேர்ந்தவர்கள். 2006 ஆம் ஆண்டு ஹைடு சட்டத்திற்கு உட்பட்டு அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் செய்துகொள்வது குறித்து எங்கள் ஆழ்ந்த கவலையையும் எதிர்ப்பையும் முன்னரே நாங்கள் தெரிவுபடுத்தியுள்ளோம். இந்த விவகாரம் குறித்து விளக்கி பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம்.

எங்களது கருத்துகளை எடுத்துக் கூறுவதற்கு பிரதமர் எங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கினார். அதன்படி அவரைச் சந்தித்து எங்கள் கருத்துகளை எடுத்துக் கூறி விவாதித்துள்ளோம்.இந்த அணு ஒப்பந்தத்தின் சாதக பாதகங்களை ஆய்வு செய்ய தான் அமைத்த UPA- இடதுசாரி குழுவிடம் கூட விவரங்களைத் தராமல் IAEAயிடம் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த ஒப்பந்தத்திற்கு அரசு அவசரம் அவசரமாக விரைந்தோடுகிறது. இது பரந்துபட்ட விஞ்ஞானிகள் சமூகத்தில் மிகவும் கவலையையும் அமைதியின்மையையும் உருவாக்கி உள்ளது. எனவே இந்த ஒப்பந்தம் குறித்து நாடு தழுவியதொரு ஆழமான விவாதத்தை நடத்தாமல் பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்துகொள்ள IAEAயிடம் அரசு ஓடக் கூடாது.

குறைந்த பட்சம் UPA- இடது சாரி குழு, இந்த பேச்சுவார்த்தைகளில் பங்கு கொள்ளாத நிபுணர்கள் ஆகியோர் மத்தியில் ஒரு முழுமையான விவாதம் நடத்தாமல் ஒப்பந்தத்திற்கு செல்லக் கூடாது என அழுத்தம் திருத்தமாக கூற விரும்புகின்றோம்.ஒப்பந்தம் வெளிநாட்டில் தயாரான அணு உலைகளை இறக்குமதி செய்ய வழிவகுக்கும்; நாட்டின் ஆற்றல் தேவையை ஈடுகட்ட இது உத்தரவாதம் அளிக்கும் என்ற வாதத்தின் அடிப்படையில் அரசு மிகவும் ஆசை ஆசையாக இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றத் துடிக்கின்றது. ஆனால் இப்படி உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் வழக்கமான அனல் மின் நிலையங்கள், புனல் மின் நிலையங்கள் மூலம் - எந்தவித வெளிநாட்டு இறக்குமதியுமில்லாமல் - உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைக் காட்டிலும் மிகவும் விலை அதிகமாக இருக்கும் என்பதை ஆய்வாளர்கள் தெள்ளத் தெளிவான புள்ளிவிவரங்கள் மூலம் மனதில் அறையும் விதத்தில் எடுத்துக் கூறியுள்ளனர்.

இந்த ஒப்பந்தம் அமுலாக்கத்திற்கு வந்தபிறகு, இந்தியாவின் வர்த்தகரீதியான அணு ஆற்றல் பரிவர்த்தனைகள் அனைத்தும் அது அமெரிக்காவோடு இருந்தாலும் அல்லது வேறு எந்த நாட்டோடு இருந்தாலும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. 2006 ஆம் ஆண்டு ஹைடு சட்டம் இதற்கு வழி வகுக்கின்றது. அணு ஆற்றல் பொருள் விநியோகம் செய்யும் நாடுகளின் குழு (Nuclear Suppliers Group) அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் தான் உள்ளது. இதனைப் பயன்படுத்தி அமெரிக்கா ஹைடு சட்டத்தை ஏவமுடியும். இல்லை அணு ஆற்றல் கூட்டுறவை 123 இருதரப்பு ஒப்பந்தம் மட்டுமே தீர்மானிக்கும் என்று சிலர் சொல்வது ஏற்க முடியாது.

ஏனெனில் இந்த ஒப்பந்தத்தின் அடிப்படை அமெரிக்க உள்நாட்டு சட்டங்கள் மீதுதான் நிற்கின்றது! அதில் ஹைடு சட்டமும் அடங்கும்.ஹைடு சட்டம் இரு தரப்பு அணு ஆற்றல் வர்த்தகத்திற்கு சம்பந்தமில்லாத பல சரத்துகளைக் கொண்டுள்ளது. ஒப்பந்தம் தொடர வேண்டுமென்றால் இந்தியா எத்தகைய வெளியுறவுக் கொள்ளகையைக் கைப்பிடிக்க வேண்டும் என்பது உட்பட பல நிபந்தனைகள் உள்ளன. சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடிப்பதற்கான உரிமை, அணு ஆற்றல் குறித்த நமது சுயேட்சையான உள்நாட்டு ஆய்வு முயற்சிகள் எல்லாவற்றையும் அடகு வைத்து இந்த ஒப்பந்தத்தை ஏற்பதால் என்ன பயன்? வழக்கமான மின்சார நிலையங்களைப் போல மூன்று மடங்கு செலவில் வரப்போகும் மின்நிலையங்கள் மூலம் நமது மின்னாற்றல் பாதுகாப்பு பலப்படும் என்பது உண்மையா?

இந்த விலைகளைக் கொடுத்து ஒப்பந்தம் காண்பது அவசியமா என்பவையே நாட்டின் முன் வந்துள்ள விவகாரம்.இந்த அணு ஆற்றல் கூட்டு வேறு பல கவலை தரும் விளைவுகளை உண்டாக்கக் கூடியது. இந்தியாவின் கைவசமுள்ள அணு ஆயுத பாதுகாப்பு (Nuclear deterrent) என்பதையும் பலகீனப்படுத்தக் கூடிய சரத்துகள் உள்ளன. அணு ஆற்றலில் உள்நாட்டு தொழில் நுட்பத்தினையும் ஆய்வு முயற்சிகளையும் வளர்த்தெடுத்து முன்னேறுவதற்கு தடைகள் உள்ளன. இந்த ஒப்பந்தம் குறித்த விவரங்களை அரசு மிகவும் ரகசியமாக வைத்துள்ளது; தனக்கு ஆதரவாக ஊடகங்களை அரசு வளைத்துள்ளது; அதன் மூலம் இந்த ஒப்பந்தம் குறித்து கட்டியெழுப்பி உள்ள ஆதரவு; சில அமைப்புகள் மற்றும் சந்தர்ப்பவாதிகளான தனிநபர்களின் மிகவும் குறுகியதும் சுயநலமிக்கதுமான நிலைபாடுகள்; துரதிஷ்டவசமாக பெருவாரியான பொது மக்களிடம் உள்ள அறியாமை ஆகியவை அனைத்தும் இணைந்து நாட்டை மிகவும் அபாயகரமான பாதையில் கொண்டு வந்து சேர்த்துள்ளது.

இது இந்த தலைமுறை இந்தியர்களின் நலன்களை மட்டுமல்லாது இனி வரவிருக்கும் பல தலைமுறை இந்தியர்களின் நலன்களையும் மோசமாக பாதிக்கக் கூடியதாகும். அமெரிக்கா வழங்கியுள்ள நிகழ்ச்சி நிரலின்படி அவசர அவசரமாக IAEA தலைமை வாரியத்திற்கு ஓடி அதன் சம்மதத்தைப் பெற்று, பின் அமெரிக்க காங்கிரசில் இப்போதைய புஷ் அரசு அமெரிக்காவிலும் மன்மோகன் சிங் அரசு இந்தியாவிலும் பதவியிலிருக்கும்போதே ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுவிட வேண்டுமென துடிப்பதை நிறுத்த வேண்டும். இந்த மிகவும் முக்கியமான பிரச்சினை குறித்து ஆழமான பரிசீலனையும் பரந்துபட்ட விவாதமும் நடத்தவேண்டும். இதனை மிகவும் வெளிப்படையாக ஒளிவு மறைவு இன்றியும் நேர்மையாகவும் நடத்தவேண்டும் என்பதை இன்றைய சிக்கலான நிலை கோருகின்றது.IAEA பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்த சந்தேகங்களின் மையமான கருத்து,

இந்த பாதுகாப்பு அம்சங்கள் எந்த அளவு இந்தியாவிற்கு பிரத்யேகமானவை என்பதாகும். ஹைடு சட்டம் மற்றும் 123 உடன்பாடு ஆகியவற்றில் ஒரு விசயம் தெளிவாக உள்ளது. IAEAயின் கட்டுப்பாட்டிற்குள் வரும் அணுமின் நிலையங்களுக்குத் தடங்களில்லாது எரிபொருள் வழங்கப்படுவதை இவை உத்தரவாதம் செய்யவில்லை. IAEA உடன் செய்துகொள்ளப்படும் உடன்படிக்கை இதனை சரிசெய்யும் என அரசு சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. IAEA எந்தக் காலத்திலும் எரிபொருள் வழங்குவதை நிர்வகிக்கும் அமைப்பாக இருந்ததில்லை. இந்தியாவின் சார்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்கள் இந்த உத்தரவாதம் குறித்து பேசினார்களா என்பது மிகுந்த சந்தேகத்துக்குரியதாகும்.IAEA உடன்படிக்கையின் சரத்துகள் அணுமின் நிலையங்களுக்கான எரிபொருள் வழங்கப்படுவதில் ஏதும் பிரச்சினை ஏற்பட்டால் இந்தியா தகுந்த சீர் நடவடிக்கை (Corrective Measures) எடுத்து தடங்களில்லாத மின்னுற்பத்தி செய்ய அநுமதிக்கும் என்பது 123 ஒப்பந்ததின் ஓர் அம்சம் என அரசு ஓயாமல் திட்டவட்டமாகக் கூறி வந்தது. இதனை கணக்கிலெடுத்துக் கொண்டு இதன் அடிப்படையில்தான் IAEAவின் கட்டுபாட்டுக்குள் இந்திய அணுமின்நிலையங்களை நிரந்தரமாக வைக்க அரசு ஒத்துக் கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

ஒப்பந்தத்திற்குள் தலை குப்புற விழுவதற்கு முன்பு அந்த “தகுந்த சீர் நடவடிக்கைகள்" எவை என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ள இந்த தேசம் விரும்புகின்றது.ஒப்பந்தப்படி இந்தியா IAEA கட்டுப்பாட்டிலிருந்து வெளியேற விரும்பினால் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கனநீர் அணு உலைகளை மட்டுமே IAEAயின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க முடியும். அதுவும் கூட அந்த அணு உலையின் எரிபொருள் மொத்தத்தையும் அதாவது பயன்படுத்தப்பட்ட மற்றும் பயன்படுத்தாத கதிர் வீச்சுப் பொருட்கள், உதிரிப் பொருட்கள் அனைத்தையும் ஒப்படைக்க வேண்டும். இது தடங்களற்ற மின் உற்பத்திக்கான பாதுகாப்பு அல்ல. இதனை ‘தகுந்த சீர் நடவடிக்கை’ எனக் கூறுவது சற்றும் சரியல்ல.மேலும் இந்த சலுகை கூட இறக்குமதி செய்யப்படும் அணு உலைகளுக்கு இல்லை.

அணு ஆற்றலுக்கு நாம் செய்யும் முதலீட்டின் பெரும்பகுதியை உண்டுவிட்டு IAEA கட்டுப்பாட்டில் இருக்கும் இவை எரிபொருள் மறுக்கப்பட்டு நிறுத்தப்பட்ட பின்பும் நிரந்தரமாக IAEA கட்டுப்பாட்டில்தான் இருக்கும். அமெரிக்காவுடனான ஒப்பந்தம் காலாவதியானால் அமெரிக்கா நேரடியாகவோ அல்லது மறைமுகமாக (IAEA மூலமாகவோ ஒரு மூண்றாம் நாட்டின் மூலமோ) எரிபொருள் வழங்குவதை ஹைடு சட்டம் தடுக்கின்றது. எனவே UPA - இடதுசாரி குழுவிடமும் தேச மக்களிடமும் சரியான விளக்கம் அளிக்க அரசு கடமைப்பட்டுள்ளது.123 உடன்படிக்கையின்படி கூட்டு முறிந்தால் இந்தியா இறக்குமதி செய்த அணு ஆற்றல் சம்பந்தப்பட்ட பொருட்கள் அனைத்தும் நிரந்தரமாக IAEAவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். இது குறித்து இந்தியாவிற்கான பிரத்யேகமான IAEA உடன்படிக்கை ஏற்பட்ட பிறகு IAEAயும் இந்தியாவும் விவாதித்து ஒத்த கருத்தை அடைந்து கூடுதல் முறைபாடுகள் (Additional Protocol) ஒரு உடன்படிக்கையினைச் செய்துகொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த கூடுதல் உடன்படிக்கையினை இப்போதே IAEAயுடன் விவாதித்து முடிவு செய்துவிடுவது மிகவும் அவசியமாகும். பாதுகாப்பு குறித்து IAEAயுடன் ஒப்பந்தம் செய்வதற்கு முன்பே இதனை முடிப்பது அவசியமாகும். IAEA பாதுகாப்பு நடவடிக்கையின் மிகவும் மோசமான தலையீடுகள் எல்லாம் இது போன்ற கூடுதல் முறைபாடுகள் குறித்த உடன்படிக்கையின் சரத்துகள் மூலமே நடந்துள்ளன. நமது ராணுவரீதியான அணு ஆற்றல் முயற்சிகளிலும் சந்தேகம் என்பதின் பேரில் எந்தவித அடிப்படையும் இல்லாது மூக்கை நுழைத்து அதிகாரம் செய்ய இந்த கூடுதல் முறைபாடுகளுக்கான உடன்படிக்கை அநுமதிக்கும்.IAEA எந்த அளவு தலையிட முடியும் அதன் எல்லைகள் யாவை என்பதை இந்தியா மிகவும் தெளிவாக வரையறுக்க வேண்டும்.

மேலும் சாதாரணமாக அணு ஆயுதமற்ற நாடுகளுக்கு அமுலாகும் வழக்கமான விதிமுறைகள் இந்தியாவிற்கு அமுலாகாது என்பதையும் இப்போதே தெளிவுபடுத்திவிட வேண்டும். கூடுதல் முறைபாடுகளுக்கான உடன்படிக்கை குறித்து பேரம் பேசுவதற்கு நமக்கு இருக்கும் வாய்ப்புகள், பலம் அனைத்தும் IAEAயுடனான பாதுகாப்பு உடன்படிக்கை கையெழுத்தானால் போய்விடும். கூடுதல் முறைபாடுகள் குறித்த வரம்புகள் குறித்து ஏதும் விவாதிக்கப்பட்டதாக தகவல் இல்லை. எத்தகைய வரம்புகள் இந்தியாவிற்கு ஏற்பு எவை ஏற்பல்ல என்பது IAEAக்கு தெளிவாக்கப்படவில்லை. அவை பாதுகாப்பு குறித்து IAEAவுடன் செய்து கொள்ளப்படவுள்ள உடன்படிக்கையின் சரத்துகளிலும் இல்லை. இது குறித்து அரசு என்ன கருத்து கொண்டுள்ளது என்பதை IAEAயுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு முன்பே அரசு தெளிவுபடுத்தவேண்டும்.

மின்நிலைய அணு உலைகளில் பயன்படுத்தப்படும் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் (யுரேனியம்) பயன்பாட்டிற்குப் பிறகு மறுசுழற்சிக்கு (Reprocessing) உட்படுத்தப்பட்டு புளூட்டோனியமாக ஆக்கப்படுவது நமக்கு மிகவும் அவசியம். ஏனெனில் இந்த புளூட்டோனியத்தைக் கொண்டே அதிவேக ஈனுலை (fast Breeder Reactor) மற்றும் உயர் கனநீர் அணுஉலை (AHWR) ஆகியவை இயக்கப்பட வேண்டும். எனவே எரிபொருள் மறுசுழற்சி என்பது நீண்ட கால ஆற்றல் பாதுகாப்பு என்பதற்கு இந்தியா கொண்டுள்ள திட்டத்திற்கு ஆதாரமான தேவையாகும்.நிபந்தனையற்ற மறுசுழற்சி உரிமையை விட்டுக் கொடுப்பதென்ற பேச்சுக்கே இடமில்லை என அரசு தொடர்ந்து உறுதியளித்து வந்தது. இந்த உரிமை குறித்து எந்த பேரமும் பேச அரசு தயாரில்லை (non negotiable) என்று கூட கூறப்பட்டது. ஆனால் இறுதியில் 123 உடன்படிக்கையில் கிடைத்ததென்னவோ மறுசுழற்சி உரிமை பற்றிய வெற்று வார்த்தைகள்தான். மறுசுழற்சிக்கான உண்மையான உரிமை எதிர்காலத்தில் இதற்கென பிரத்யேகமான மிக நவீனமான மறுசுழற்சி நிலையம் ஒன்று கட்டப்பட்ட பின்தான் ஏனைய பிற நிலையங்களோடு சேர்த்து அநுமதி வழங்கப்படும். அதற்கும் பிரத்யேகமான பல பாதுகாப்பு ஏற்பாடுகளும் கட்டுப்பாடுகளும் கூடுதல் முறைபாடுகளும் (Protocols) நடைமுறைப்படுத்தப்படும்.

ஆக இத்தனை தடைகளைத் தாண்டிய பிறகே மறுசுழற்சி என்பதை ஆரம்பிக்க முடியும். இவை குறித்து இப்போதே தெளிவாகப் பேசி முடிவெடுத்து உடன்படிக்கை காண வேண்டும். IAEAயின் கட்டுப்பாடுகள் பாதுகாப்பு நிபந்தனைகளை ஒத்துக் கொள்ளுமுன் இதனை முடிவு செய்யவில்லை என்றால் பிறகு ஒருநாளும் இது நடக்காது. ஆனால் அரசு சமீபத்தில் IAEA உடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இதனைச் செய்யவில்லை. இந்த குறைபாட்டை உடனடியாக நீக்கவேண்டும். இல்லையெனில் இந்தக் குறைபாடு எதிர்காலத்தில் இந்தியாவை மிகவும் மோசமாக சீரழிக்கும்.இது போன்று மிகவும் முக்கியமான கட்டுப்பாடுகள் குறித்த வினாக்கள் உள்ளன. இவற்றுக்கான விளக்கங்களை அரசு இதற்காக அமைக்கப்பட்ட UPA- இடதுசாரி குழுவிற்கு கூட அளிக்கவில்லை.

இந்த அறிக்கையில் எழுப்பப்பட்டுள்ள பல பிரச்சினைகளுக்கும் அரசிடம் பதில் இல்லை. அனைத்து ஒப்பந்தங்களையும் ஏனைய பேச்சுவார்த்தை விவரங்களையும் UPA-இடதுசாரி குழுவின் முன்னரும், இது குறித்த ஆழமான விவரம் தெரிந்த சுயேட்சையான நிபுணர் குழுவிடமும் அளிக்க வேண்டும். இந்த நிபுணர் குழு அரசு சார்பில் IAEA உடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாதவர்களாக இருக்க வேண்டும்.

கையொப்பமிட்டவர்கள்:
Dr.பி.கே. அய்யங்கார், முன்னாள் பெருந்தலைவர், அணு சக்தி ஆணையம். (Former Chairman - Atomic Energy Commission)

Dr. ஏ. கோபாலகிருஷ்ணன், முன்னாள் பெருந்தலைவர், அணு சக்தி நெறியாள்கை வாரியம். (Former Chairman - Atomic Energy Regulatory Board)

Dr. ஏ.என்.பிரசாத், முன்னாள் இயக்குனர், பாபா அணுவியல் ஆய்வு மையம். (Former Director - Bhabha Atomic Research Centre)

(pkrajan_61@yahoo.co.in)
அன்புள்ள சாரு,

நான் உங்கள் இணைய தளத்தின் வாசகர்களில் ஒருவன். ‘ இந்தியா விற்பனைக்கு ’ கட்டுரையைப் படித்தேன். அதில் நீங்கள் கூறியுள்ள படி விவசாயிகளின் நிலை, கல்வி போன்ற விஷயங்களில் உங்களோடு எனக்கு முழு உடன்பாடு உண்டு. ஆனால் அணுசக்தி பற்றி நான் வேறு விதமாக நினைக்கிறேன். நிலக்கரியிலிருந்து இன்னும் 200 ஆண்டுகளுக்கு நாம் மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். ஆனால் அணுசக்தியிலிருந்து 700 ஆண்டுகளுக்கு மின்சாரம் கிடைக்கும். மேலும் இது சுற்றுப்புறச் சூழலையும் பாதிக்காது. இதன் ஒரே பக்க விளைவு என்னவென்றால், இதன் மூலம் உருவாகும் ரேடியோஆக்டிவ் கழிவுகளை 1000 ஆண்டுகளுக்கு கவனமுடன் கண்காணிக்க வேண்டும். அதற்கான தொழில்நுட்பம் நம்மிடம் உள்ளது. அது மட்டுமல்லாமல் அக்கழிவை glass matrix – ஆக மாற்றி சுற்றுச் சூழலைப் பாதிக்காத ஒரு இடத்தில் வைத்து விடவும் முடியும். இந்த அணுசக்தியை நாம் விட்டுவிட முடியாது; கூடாது.

யுரேனியத்தைப் பொறுத்தவரை அது நம் நாட்டில் அதிகம் கிடைக்கவில்லை. ஆந்திரப் பிரதேசம் நாகார்ஜுன சாகரிலும், மேகாலயாவிலும்தான் யுரேனியம் தாது கிடைக்கிறது. அங்குள்ள சில உள்ளூர்ப் பிரச்சினைகளால் சுரங்கம் தோண்டி அதையும் எடுக்க முடியாத நிலை. அப்படி எடுத்தாலும் அது நமக்குப் போதாது.

தோரியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் சொல்வது சரி. இந்தியாவில் தோரியம் அதிகமாகவே கிடைக்கிறது. ஆனால் தோரியம் பிளவு படக் கூடிய பொருள் அல்ல. அதை முதலில் அணு உலையில் வைத்து யுரேனியம்-233 ஆக மாற்றியாக வேண்டும். அதன் பிறகே அதை நாம் அணுசக்தியாகப் பயன்படுத்த முடியும். இதில் மூன்று கட்டங்கள் உள்ளன.
முதல் கட்டம், யுரேனியத்திலிருந்து ப்ளூட்டோனியத்தை உருவாக்க வேண்டும். இரண்டாவது கட்டத்தில், இந்த ப்ளூட்டோனியத்தை தோரியத்திலிருந்து யுரேனியம்-233ஐ உருவாக்கப் பயன்படுத்த வேண்டும். மூன்றாவது கட்டத்தில், மின்சார உற்பத்திக்காக இந்த யுரேனியம்-233ஐ எரிக்க வேண்டும். ஆக, தோரியத்திலிருந்து மின்சாரம் தயாரிக்க வேண்டுமானால், யுரேனியத்தைத்தான் நாம் ஆதாரமாகக் கொள்ள வேண்டும். இதைத் தவிர தோரியத்திலிருந்து மின்சாரம் தயாரிக்க வேறு எந்த வழியும் இல்லை.

எனவே, அணுசக்தி ஒப்பந்தம் நல்லதுதான். ஆனால் இதை வைத்துக் கொண்டு இந்தியா அமெரிக்காவுக்கு அடிமையாகி விடக் கூடாது. அது ஒன்றுதான் இந்தியா கவனமாக இருக்க வேண்டிய விஷயம்.

நான் கல்பாக்கத்தில் விஞ்ஞானியாக இருக்கிறேன். உங்களுடைய ராஸ லீலாவைத் தவிர மற்ற நூல்கள் அனைத்தையும் படித்திருக்கிறேன். உங்கள் எழுத்தை வாசிக்கும் போது சத்தியத்தின் வெகு அருகாமையில் இருப்பது போல் உணர்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.

சோமசுந்தரம்,
கல்பாக்கம்.

Thursday, July 24, 2008

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் - இயக்கம் நடத்தப்போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. அதனைத் தொடர்ந்து சென்னையிலும் பிற நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி இருக்கிறது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் இயங்கும் பாஸ்டியர் நிறுவனம் நோய்த்தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்து வந்தது. பாரம்பரியமிக்க இந்த நிறுவனத்தை மூடும்படி மத்திய சுகாதார அமைச்சரகம் உத்தரவிட்டது. இங்கு உற்பத்தி செய்யப்பட்ட நோய்த்தடுப்பு மருந்துகளைத் தனியாரிடம் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அரசுக்குச் சொந்தமான பாஸ்டியர் நிறுவனத்தை மூடியது ஏன் என்று மார்க்சிஸ்ட் கட்சி கேள்வி எழுப்புகிறது.அதே போல், எத்தனையோ ஆண்டுகளாக கிண்டி பி.சி.ஜி. நிறுவனம் நோய்த் தடுப்பு மருந்தினை உற்பத்தி செய்து வந்தது. அந்த நிறுவனத்தையும் மூடும்படி மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டிருக்கிறது. அங்கே உற்பத்தி செய்யப்பட்ட மருந்தும் இனி மாறுவேடத்தில் தனியார் நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும்.

அந்தத் தனியார் நிறுவனங்களிலிருந்து இனி மத்திய சுகாதார அமைச்சரகம் கொள்முதல் செய்து கொள்ளும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியிருக்கிறது. அதனை அனுமதிக்கக் கூடாது என்று போர்க்குரல் எழுப்பி வருகிறது.இமாசலப் பிரதேசத்தில் மத்திய சுகாதாரத்துறையின் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வந்தது. அதனையும் மூடும்படி அமைச்சர் அன்புமணி உத்தரவிட்டார். இப்போது மூடப்பட்டும் விட்டது. இதனை அந்த மாநில பி.ஜே.பி. அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது. அந்த ஆராய்ச்சி நிலையத்தை தாங்களே நடத்தத் தயாராக இருப்பதாகவும் அதனை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறது.

இதே போல் குன்னூர் பாஸ்டியர், கிண்டி பி.சி.ஜி. மருந்து உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டதைத் தமிழக அரசு எதிர்க்க வேண்டாமா? அவற்றை மாநில அரசே ஏற்று நடத்த முடியாதா?குன்னூர் பாஸ்டியர் நிறுவனம் குழந்தைகளின் நோய்த் தடுப்பிற்காகப் பல்வேறு மருந்துகளை உற்பத்தி செய்து வந்தது. கக்குவான், தொண்டை அடைப்பான், ரணஜன்னி போன்ற நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகள் மட்டுமல்ல; நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான `ரேபிஸ்' மருந்தும் இங்குதான் தயாரிக்கப்பட்டது.

இந்த நிறுவனத்தின் சிறந்த செயல்பாடுகளுக்காக 2003-ம் ஆண்டு தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது. இறுதி வரை லாபத்தில் இயங்கி வந்த இந்த நிறுவனம் ஏன் மூடப்பட்டது என்பது எவருக்கும் தெரியாத ரகசியம்.உலக சுகாதார மையத்தின் பரிந்துரையைப் பின்பற்ற இந்த நிறுவனம் தவறியதால் மூடப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சரகம் அறிவித்தது. அந்தப் பரிந்துரையை யார் செயல்படுத்தவில்லை? அப்படிச் செயல்படுத்தத் தவறியிருந்தால் அதற்குப் பொறுப்பு மத்திய சுகாதார அமைச்சரகம்தானே? ஆகவே, தண்டிக்கப்பட வேண்டியது குன்னூர் நிறுவனமா? மத்திய சுகாதாரத்துறையா?

குன்னூர் பாஸ்டியர் நிறுவனம் மூடப்பட்டதை ஊழியர்கள் மட்டும் எதிர்க்கவில்லை. நீலகிரி மாவட்ட மக்களே எதிர்க்கிறார்கள். பொய்யான காரணங்களைக் கூறி பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்படுவதை இப்போது நாடே உணர்ந்து விட்டது.எனவே, மீண்டும் பாஸ்டியர் நிறுவனத்தை ஆராய மத்திய மருந்து தரக்கட்டுப்பாடு சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழு தரும் அறிக்கை மீது அடுத்த நடவடிக்கை எடுப்பார்களாம். அந்த நிறுவனத்தை மூடுவதென்று முடிவு செய்து விட்டனர். அங்கு உற்பத்தி செய்யப்பட்ட மருந்துகளை தனியார் நிறுவனங்களில் வாங்குவது என்றும் முடிவு செய்து விட்டனர். அதன் பின்னர் அமைக்கப்படும் குழு என்ன அறிக்கை தரும் என்பது பாமரருக்கும் புரியும்.

ஆங்கிலேயர் காலத்திலேயே மருந்து உற்பத்திக்குத் தகுதியான இடம் என்று குன்னூர் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதற்கான கட்டடங்களும் கட்டப்பட்டன. அதனை விரிவுபடுத்துவதற்கு இன்னும் தேவையான இடங்கள் இருக்கின்றன. அங்கேயே நவீன கருவிகளை அமைக்க முடியும்.உலக சுகாதார மையத்தின் பரிந்துரைகளுக்கு ஏற்ப குன்னூர் பாஸ்டியர் நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய முடியும் என்று 2002_ம் ஆண்டு இந்த நிறுவனத்தை ஆய்வு செய்த சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். அதன் மீதுதான் 30 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கித் தந்தது.

சென்ற ஆண்டு இந்த நிறுவனத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. லூயிஸ்பாஸ்டியர் சிலை நிறுவப்பட்டது. நூற்றாண்டு விழா கலையரங்கமும் கட்டப்பட்டது. இங்குள்ள தரக்கட்டுப்பாட்டு நிலையம் சர்வதேசத் தரத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில் சென்ற ஆண்டுதான் புதுப்பிக்கப்பட்டது.மஞ்சள் காமாலைக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வுக் கூடமும் 16 லட்சம் ரூபாய் செலவில் சென்ற ஆண்டுதான் திறக்கப்பட்ட

இத்தனைக்கும் பின்னர் குன்னூர் நிறுவனம் எதற்கும் தகுதியில்லை என்று மூடப்பட்டதன் பின்னணி மர்மமாகவே இருக்கிறது. ஆறு மாதங்களுக்கு முன்னர் சுகாதாரத் துறையின் இணைச் செயலாளர் குன்னூர் பாஸ்டியர் நிறுவனத்தைப் பார்வையிட்டார். எந்தக் காரணம் கொண்டும் இந்த நிறுவனம் மூடப்படமாட்டாது என்று ஊழியர்களுக்கு உறுதி அளித்தார். அடுத்த சில நாட்களிலேயே அந்த அதிகாரி வேறு இடத்திற்குத் தூக்கி அடிக்கப்பட்டார்.

குன்னூர் பாஸ்டியர் நிறுவனத்தையும் கிண்டி பி.சி.ஜி. நிறுவனத்தையும் இமாசலப் பிரதேச ஆய்வுக் கூடத்தையும் மூடிவிட்டு செங்கல்பட்டு அருகே 50 ஏக்கரில் புதிய நிறுவனத்தை மத்திய சுகாதாரத் துறை துவக்கப் போகிறதாம். உறை மோரைக் கொடுத்து விட்டு விலை மோருக்கு அலைந்த கதைதான். புதிய நிறுவனம் உற்பத்தியைத் தொடங்கும் வரை தனியார் நிறுவனங்களில் மருந்துகளைக் கொள்முதல் செய்யப்போகிறார்கள்.கொடிய நோய்களிலிருந்து லட்சோப லட்சம் குழந்தைகளைக் காக்க மருந்து தயாரித்துத் தந்த பல நூறு ஊழியர்கள் வீதிக்கு விரட்டப்படுகிறார்கள்.

Tuesday, July 22, 2008

மன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையில் ஆதாம் பாலம் என்றும் ராமன் பாலம் என்றும் அழைக்கப்படும், கடலுக்கடியில் கிடக்கும் மணல்திட்டுகளை வெட்டி எடுக்கும் பணி சேது சமுத்திரத் திட்டத்திற்காக ஆரம்பித்திருக்கும் இவ்வேளையில், இந்துவெறி பார்ப்பன கும்பல் ""ராமர் கட்டிய பாலத்தை இடிக்காதே!'' என ஓலமிட ஆரம்பித்துள்ளது.

பா.ஜ.க., விசுவ இந்து பரிசத் போன்ற மதவெறிக் கூட்டத்துடன் சுப்பிரமணிய சாமியும், பார்ப்பன ஜெயலலிதாவும் அறிக்கை மேல் அறிக்கை விடுகின்றனர். பதிலுக்கு தி.மு.க. கூட்டணியில் இருந்தும் பதில் அறிக்கை என இராமன் பாலம் விவகாரம் சூடேறியுள்ளது.

""தொன்மையான வரலாற்றுச் சின்னமாகவும் மக்களின் நம்பிக்கைக்கு ஆதாரமாகவும் விளங்கும் பாலம்'' என்று இல.கணேசன் மணல்திட்டைக் காப்பாற்றத் துடிப்பதைக் கேட்பவர்கள், திட்டப்பணி நடைபெறும் பாதை எண்6 வழியாக (ஆதாம் பாலம்) கால்வாய் வெட்டச் சொன்னதே முந்தைய பா.ஜ.க. அரசின் திருநாவுக்கரசர் தலைமையிலான அமைச்சகம்தான் என்பதை மறந்து விடவேண்டும்.

""ஆங்கிலேயர்கள் வரைந்த படங்கில்கூட ராமர் பாலம் இருந்தது. தற்போது இடிக்கப்படும் பாலத்தின் கற்களை இரகசியமாக கப்பலில் எடுத்துச் செல்கின்றனர். பிரதமரும் ஜனாதிபதியும் உடனே தலையிட வேண்டும்'' என்று ஊளையிடும் ஜெயா மாமியின் அ.தி.மு.க.தான், 2001 தேர்தல் அறிக்கையில் ""ஆதாம் பாலத்து மணலை அகற்றி கால்வாய் அமைக்கப்படும்'' என்று கூறியதை மறந்து விடவேண்டும்.

தயானந்த சரஸ்வதி எனும் இந்துவெறி சாமியார் ""ராமேஸ்வரம் கடல் பகுதியில் உள்ளது இயற்கையான பாலமல்ல. கி.பி. 15ஆம் நூற்றாண்டு வரை அப்பாலத்தில் மக்கள் சென்று வந்தனர்'' என்று சொல்கிறார். அப்படியென்றால் 11ஆம் நூற்றாண்டில் ராஜராஜ சோழன் ஏன் அப்பாலத்தைப் பயன்படுத்தாமல் கடற்படையை ஏவி ஈழம் வென்றான்? என்று அவரை யாரும் கேட்கப் போவதில்லை.

சொல்லி வைத்த மாதிரி எல்லோரும் ""அமெரிக்காவின் நாசாவே வெளியிட்டிருக்கும் செயற்கைக் கோள் படத்தில் ராமர் பாலம் இருக்கிறது'' என்கிறார்கள். நாசாவின் இணையதளமோ, கடலில் நடக்கும் இயற்கை மாற்றத்தால் உண்டான மணல்திட்டுக்களே அவை; அங்கு மனிதனால் உருவாக்கப்பட்ட எவ்விதமான கட்டிடங்களும் இல்லை எனச் சொன்னதையும், நாசா சொன்ன மணல் திட்டுக்களைப் பாலம் எனத் திரித்தவர்கள் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர்தான் என்பதையும் அவர்களிடம் யாரும் இடித்துரைக்கப் போவதில்லை.

இலங்கைக்கு செல்ல, கடலைக் கடக்க பாலம் கட்டிய ராமன், பாம்பனில் இருந்து ராமேஸ்வரம் வரை எப்படிப் போனான்? புஷ்பக விமானத்திலா? அப்படியென்றால் அதிலேயே இலங்கைக்கும் சென்றிருக்கலாமே?""ராமன் பாலத்துக்கு 15 லட்சம் வருச வரலாறுண்டு'' என்று ஜெயாவும், பா.ஜ.க.வும் சொல்கிறார்கள். ஆனால், மனித இனம் உருவாகியே 5 லட்சம் ஆண்டுகள்தானே ஆகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்திலே மலைகள் ஏதும் இல்லையே! பாலம் கட்ட பெரும்பாறைகளுக்கு ராமன் என்ன செய்தான்? கரசேவை நடத்திக் கல் வரவழைக்க அன்றைக்கு அத்வானி போன்றவர்கள் இல்லையே!

இவ்வளவு "பழமையான' பாலத்தைக் காக்க, ஏன் இவர்கள் ஆண்ட 6 ஆண்டுகளில் தொல்பொருள் சின்னமாக அதனை அறிவிக்கவில்லை? உமாபாரதி சுரங்கத்துறை அமைச்சராக இருந்தபோது அப்பகுதியில் 21 மீட்டர் வரை தோண்டிப் பார்த்தும் கட்டிடங்கள் ஏதும் தென்படாததாலா?
உண்மையில் பாக் நீரிணைப்பில் பாலம் இருந்ததா?

கடலியலாளர்கள் ஜெயகரன், ""நூறாண்டுகளுக்கு 1 மீட்டர் வரை கடல் மட்டம் உயர்ந்து வருவதால் 5000 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாட்டுடன் தரையால் இணைக்கப்பட்டிருந்த இலங்கை, தீவாகிப் போனது'' என்பதைப் பல ஆதாரங்களுடன் சொல்கிறார். (ஆதாரம்: குமரி நில நீட்சி, ஜெயகரன்). இதேபோல ஆஸ்திரேலியாவுக்கும் பாப்புவாநியூகினி தீவுக்கும் இடையிலும் சிங்கப்பூர் மலேசியா இந்தோனேசியாவுக்கும் இடையிலும் நிலப்பகுதிகளை கடல் விழுங்கி வெண்மணற் திட்டுகள் அமைந்துள்ளன. அவற்றை எவரும் ராமன் பாலம் அல்லது இலட்சுமணப் பாலமாகக் கருதுவதில்லை.

இலட்சக்கணக்கான வருடங்கள் என்ன, 5000 வருடத்துக்கு முன்னர் வெறும் தரையில் நடந்தே போய்விடக்கூடிய இடத்துக்கு பாலம் கட்டப்பட்டது என்றால் ஒன்று கட்டியவன் கூமுட்டை. அல்லது இதை நம்புபவன் கேணை. பா.ஜ.க. உண்மையிலேயே இத்திட்டத்தை எதிர்க்கிறதா என்றால், இல்லவே இல்லை. அவர்கள் 5000 வருடங்களுக்கு முன்னர் ராமன் கட்டியதாகக் கூறப்படும் பாலத்தை இடிப்பதை மட்டுமே எதிர்க்கின்றார்களே தவிர, சேதுக்கால்வாய் திட்டத்தை எதிர்க்கவில்லை.

"எண்ணெய் தடவாமல் தலை சீவ முடியுமா?' எனக் கருணாநிதி கேட்டால் "எண்ணெய் தடவாமலே தலை சீவுவதுதான் ஃபேசன்' எனக் கூறும் இல.கணேசன் மாற்று வழியில் தோண்டச் சொல்கிறார். கருணாநிதி, தன் கூட்டணியை வைத்தே "சேது சமுத்திரத் திட்டப் பாதுகாப்புக் குழு' ஒன்றை உருவாக்கி, "சேதுக்கால்வாய் போன்றவற்றை நிறைவேற்றவே தி.மு.க. தனிநாடு கேட்டதாகவும், மைய அரசே என்னென்ன வேண்டும் சொல்லுங்கள் எனக் கேட்டதும், தனிநாடு கொள்கையைக் கைவிட்டு இந்தியாவில் இருந்து கொண்டே சேதுக்கால்வாய் வெட்டலாமென்று பிரிவினையைக் கைவிட்டதாகவும்' புத்தம் புது திரைக்கதை ஒன்றைச் சொன்னார்.

ராமதாசோ ""இத்திட்டம் நிறைவேற்றி முடிக்கப்பட்டால் தமிழகத்தில் தொழில்வளம் பெருகும். வணிகம் வளர்ச்சி அடையும். பல துறைமுகங்கள் ஏற்பட்டு வேலை வாய்ப்புகள் பெருகும்'' என்று கற்பனையைத் தூண்டிவிடுகிறார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் சீத்தாராம் யெச்சூரியோ சிறந்ததொரு தரகு முதலாளியின் வார்த்தைகளிலேயே ""உலக அளவில் கப்பல் போக்குவரத்தில் மிகப் பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இத்துறையில் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் முன்னேற வேண்டும் என்றால், இது போன்ற திட்டங்கள் அவசியம்'' என்கிறார்.

துறைமுகங்கள் வளருவதால் வேலை வாய்ப்பு பெருகும் என்பது கடைந்தெடுத்த பொய்யாகும். சேதுக்கால்வாய் திட்டம் வருவதற்கு முன்னரே 80களில் தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை செய்து வந்த ஆயிரக்கணக்கான டி.எஸ்.ஏ. தொழிலாளர்களை துறைமுக நவீனமயமாக்கம் இன்று வீதிக்கு எறிந்து விட்டது. துறைமுகங்கள் முழுக்க கணினிகளால் இயக்கப்படுகின்றன. 1990களுக்குப் பின்னர் பின்பற்றப்படும் மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கையால் பல லட்சம் சிறுதொழில்கள் அழிந்துவிட்டன. கிராமங்களின் கைவினைஞர்களும், விவசாயிகளும் பெருநகரங்களை நோக்கி படையெடுக்கின்றனர். ஏற்கெனவே இருந்த வாழ்வை அழித்து விட்டு சேதுக்கால்வாய் மூலம் தொழில் பெருகும், வணிகம் பெருகும் என்று சொல்வதில் கடுகளவும் பொருளில்லை.

"தமிழனின் கனவுத் திட்டம்' என்று சொல்லப்படும் சேதுசமுத்திரத் திட்ட கால்வாய்க் கனவையே பிரிட்டிஷ்காரன்தான் உருவாக்கினான். 1860களில் பஞ்சங்களை உருவாக்கிய வெள்ளை ஏகாதிபத்தியம் பருத்தி, அவுரி போன்றவற்றையும் தேக்கு போன்ற மரங்களையும் விரைவாய்க் கொண்டு செல்ல வடிவமைத்த திட்டத்தை "தமிழனின் கனவு'த் திட்டம் என்று சொல்வதே அடிமைப் புத்தியாகும். அன்று பிரிட்டனால் நிறைவேற்ற முடியாமல் போன இந்தத் திட்டத்தை, இன்று உலக நிதி மூலதனம் நிறைவேற்றக் கிளம்பியுள்ளது. இத்திட்டத்தின் ஆதரவாளர்கள் ""சேதுவால் நம்நாடு மட்டுமல்ல. தென் கிழக்காசிய நாடுகளும் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள நாடுகளும் பயன்பெறும்; வணிகமும் தொழிலும் பெருகும்; அன்னிய முதலீடு அதிகரிக்கும்; அந்நியச் செலாவணி அதிகரிக்கும்; ஏற்றுமதி அதிகரிக்கும்; துறைமுகங்களின் சரக்குக் கையாளும் திறன் அதிகரிக்கும்'' என்று சேதுவின் உண்மை நோக்கத்தை சொல்லி விடுகிறார்கள்.

சென்னைக்கு அருகில் ஹோண்டாவும், ஹூண்டாயும் பல கோடி அந்நிய முதலீட்டில்தான் வந்தன. எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது? அவர்கள் கார்களை ஒருங்கிணைத்து சென்னை துறைமுகம் மூலமாகத்தான் ஏற்றுமதி செய்கின்றனர். இதன்மூலம் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு பெருகியுள்ளதா? இல்லவே இல்லை.

உலகில் அருகி வரும் கடல் ஆமைகள் முட்டையிடும் பகுதி என்றும் பவளப் பாறைகள் செறிந்த பகுதி என்றும் உயிரியலாளர்களால் போற்றப்படும் மன்னார் வளைகுடாவை ஏகாதிபத்தியம் சேதுக்கால்வாய் திட்டத்தின் மூலம் தனது கோரப்பசிக்குப் பலியாக்கி வருகின்றது. ஏகாதிபத்தியத்திற்காகப் போடப்படும் சேதுக்கால்வாயின் மைய நோக்கத்தைப் பற்றி யாரும் யோசிக்க விடாமல் இருக்கவே ஓட்டுக் கட்சிகள், ராமன் பாலம் கட்டினானா? இல்லையா? என்ற பட்டிமன்றத்தில் இறங்கியுள்ளன.·

Saturday, July 19, 2008

Top 10 software companies in India


1. Tata Consultancy ServicesJuly 17, 2008

The Indian software industry is set to keep up its growth rate despite the slowdown in the economy. The National Association of Software and Services Companies (Nasscom) has forecast a strong outlook for FY08-09 strong with software and services revenue seen growing by 21-24 per cent. The software and services exports are set to hit the $50 billion-mark.
The software and services exports segment grew by 29 per cent (in USD) to register revenues of $40.4 billion in FY07-08, up from $31.4 billion in FY06-07. The domestic segment grew by 26 per cent (in INR) to register revenues of $ 11.6 billion in FY07-08. According to the latest Nasscom rankings, Tata Consultancy Services Ltd., Infosys Technologies Ltd. and Wipro Technologies Ltd are the top 3 revenue generators in India. Check out the top ten players in the Indian IT industry.

TCS
Founded in 1968, TCS is one of India's largest corporate houses. It is also India's largest IT employer with a staff strength of 111,000 employees.
The company began as a division of the Tata Group, called the Tata Computer Centre. Its main business was to offer computer services to other group companies. Soon the company was spun off as Tata Consultancy Services after it realised the huge potential of the booming IT services.
The company posted a consolidated net profit of Rs 1,290.61 crore (Rs 12.90 billion) for the first quarter ended June 30, 2008, an increase of 7.3 per cent compared to the year-ago period.Its annual sales worldwide stands at $5.7 billion for the fiscal year ending March 2008. During the year 2007-08,

TCS' consolidated revenues grew by 22 per cent to Rs 22,863 crore ($5.7 billion). S. Ramadorai, is the chief executive officer and managing director of TCS.

TCS is IDC-Dataquest IT best employer in IT services in 2007. TCS also topped DataQuest DQTop 20 list of IT service providers in 2007.

2. Wipro July 17, 2008

What started off as a hydrogenated cooking fat company, Wipro is today is a $5 billion revenue generating IT, BPO and R&D services organisation with presence in over 50 countries.
Premji started Wipro with the 'idea of building an organisation which was deeply committed to values, in the firm belief that success in business would be its inevitable, eventual outcome'. The company has over 72,000 employees.

Wipro's revenues grew by 33 per cent to Rs 19,957 crore (Rs 200 billion) for the year ended March 31, 2008. The net profit grew by 12 per cent to Rs. 3,283 crore (Rs. 32.83 billion). The revenues of the combined IT businesses was $4.3 billion with 43 per cent YoY growth.

Wipro was the only Indian company to be ranked among the top 10 global outsourcing providers in IAOP's 2006 Global Outsourcing 100 listing. Wipro has also won the International Institute for Software Testing's Software Testing Best Practice Award.

3. Infosys Technologies LtdJuly 17, 2008

Infosys Technologies Ltd was started in 1981 by seven people with $250. Today, the company boasts of revenues of over $ 4 billion and 94,379 employees.

Under the leadership of N R Narayana Murthy, the company has become a global brand. The company is now headed by Kris Gopalakrishnan. The income for the quarter ended June 30 2008 was Rs 4,854 crore (Rs 48.54 billion). The net profit stood at Rs 1,302 crore (Rs 13.02 billion).

Forbes magazine named Infosys in its list of Global High Performers. Waters magazine rated Infosys as the Best Outsourcing Partner. The Banker magazine conferred two Banker Technology Awards on Infosys to acclaim its work in wholesale and capital markets in two categories - Payments and Treasury Services, and Offshoring and Outsourcing.

The International Association of Outsourcing Professionals (IAOP) ranked Infosys at No. 3 in its '2008 Global Outsourcing 100'.

4. Satyam Computer ServicesJuly 17, 2008

Established in 1987 by Ramalinga Raju, Satyam has a staff strength of 51,000 employees. In 2008, the company's revenues crossed the $ 2-billion mark.

'A simple, yet extensive management model to create value, which promotes entrepreneurship, a focus on the customer, and the constant pursuit of excellence,' is the company's mantra for success. In FY2008, its revenues saw a growth of 30.7 per cent to Rs 8,473.49 crore (Rs 84.73 billion) compared to fiscal 2007.

The net profit stood at Rs 1,687.89 crore (Rs 16.87 billion), a growth of 20.2 per cent over fiscal 2007. Satyam is among the youngest IT service companies to reach $1 billion in annual revenues. It is ranked No. 1 in the ASTD (American Society for Training and Development) BEST Award, 2007.

HCL TechnologiesJuly 17, 2008

HCL is a leading global technology player with annual revenues of $4.9 billion. The HCL Enterprise comprises two companies listed in India, HCL Technologies and HCL Infosystems. Founded in 1976, HCL is one of 'India's original IT garage start ups'.

The HCL team comprises 53,000 professionals of diverse nationalities, operating across 18 countries. At a time when India had a total of 250 computers, Shiv Nadar led a young team which passionately believed in the growth of the IT industry.

Three decades later, he succeeded in creating a $ 4.9 billion global enterprise. The company has reported consolidated revenue of Rs 3017.5 crore (Rs 30.17 billion) during the quarter ended March 31, 2008. The profit after tax stood at Rs. 81.5 crore (Rs 815 million).

6. Tech MahindraJuly 17, 2008

Tech Mahindra was incorporated as a joint venture between Mahindra & Mahindra and BT plc in 1986 under the name of 'Mahindra-British Telecom'.

Later, the name was changed to 'Tech Mahindra', in order to reflect the diversification and growth of the client base and service offerings. The company was incorporated in 1986. Tech Mahindra is a global systems integrator and business transformation consulting firm focused on the communications industry. At the helm of the fast expanding organisation is Vineet Nayyar.

In a career spanning over 40 years, he has worked with the government, international multilateral agencies and the corporate sector. Tech Mahindra's net profit rose 8.57 per cent to Rs 196.4 crore (Rs 1.96 billion) on 6.09 per cent growth in net sale to Rs 911.6 crore (Rs 9.11 billion) in Q3 December 2007 over Q2 September 2007.

7. Patni Computer SystemsJuly 17, 2008

Patni Computer Systems Ltd one of the leading global providers of information technology services and business solutions. The company has clients across the Americas, Europe and Asia-Pacific locations.

The company has serviced more than 400 Fortune 1000 companies, for over two decades. Patni Computer Systems Limited was incorporated on 10 February 1978 under the Companies Act, 1956. On 18 September 2003, the Company converted itself from a private limited company into a public limited company.

The company headed founded by Narendra K Patni by has a staff strength of over 14,000 professionals. The revenues for the quarter ended March 2008 stood at $ 176.4 million (Rs. 7,061.2 million) up 13.1% YoY from $ 156.0 million (Rs. 6,724.1 million). The net income for the quarter at US$ 18.1 million (Rs. 724.6 million) down 35.0 per cent YoY from $ 27.8 million (Rs. 1,200.3 million).Frost & Sullivan ranked Patni 1st among 'Top 5 Engineering Service Providers'.

8. i-flex SolutionsJuly 17, 2008

iflex started as a division of Citicorp (now Citigroup), wholly owned subsidiary called Citicorp Overseas Software Ltd. (COSL) in 1991. Later, a separate company Citicorp Information Technologies Industries Ltd. (CITIL) was formed and Rajesh Hukku was appointed as its head.
CITIL started off with the universal banking product, MicroBanker which became very successful. In the mid-90s, CITIL developed Flexcube at its Bangalore development centre. After the launch of Flexcube, all of CITIL's transactional banking products were brought under a common brand umbrella. CITIL changed its name to i-flex solutions to reflect its growing independence from Citicorp and to strengthen its Flexcube brand.

In 2006, i-flex became a majority-owned subsidiary of Oracle Corporation i-flex posted a top line growth of 8 per cent QoQ with revenue for the quarter ended March 31, 2008 at Rs 672 crore (Rs 6.72 billion) as compared to Rs 601 crore (Rs 6.01 billion) for the corresponding quarter during the previous year representing a 12 per cent YoY growth.

The net income for quarter stood at Rs 185 crore (Rs 1.85 billion) representing 73 per cent growth QoQ. The revenue for the full year ended March 31, 2008 stood at Rs 2,380 crore (Rs 23.80 billion), up 15 per cent as compared to the previous year.

9. MphasiSJuly 17, 2008

MphasiS Limited was formed in June 2000 after the merger of the US-based IT consulting company MphasiS Corporation (founded in 1998) and the Indian IT services company BFL Software Limited (founded in 1993).

Jeya Kumar is CEO of MphasiS, which has a staff strength of 27,000 people. For the year ended 31 March 2008, the MphasiS Group recorded revenues of Rs 2,423 crore (Rs 24.23 billion), a growth of Rs 662 crore, which is 38 per cent over the previous year.

The net profit increased by 42 per cent from Rs 180 crore (Rs 1.8 billion) to Rs 255 crore (Rs 2.55 billion) during the year ended 31 March 2008. MphasiS was named among amongst the Top 100 Companies in Global Outsourcing.

10. L&T InfotechJuly 17, 2008

L&T Infotech is a global IT services and solutions provider. It is a subsidiary company of is Larsen & Toubro Ltd. (L&T), an engineering, manufacturing and construction conglomerate, with global operations.

A M Naik is the chairman of the company. Originally founded as L&T Information Technology Ltd (LTITL), a wholly-owned subsidiary of Larsen & Toubro Ltd (L&T), the company changed its name to L&T Infotech on 1st April, 1997. In 2004, it tied up with Fidelity Information Services, a division of Fidelity National Financial to provide banking solutions for the Indian banking industry. In 2007-08, L&T had recorded revenues of Rs 29,600 crore (Rs 296 billion).
எதற்காக இந்தத் தேவையற்ற ஒப்பந்தம் பிரதமர் அவர்களே!
வி.ஆர். கிருஷ்ணய்யர்

பிரதமர் அவர்கள் எனக்கு அண்மையில் எழுதியுள்ள பதில் கடிதத்தில், ‘தேச நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கம் கிஞ்சிற்றும் இல்லை' என்று குறிப்பிடுகிறார். மகத்தான மனிதர்களே இடறி விழுந்திருப்பதை நான் நினைத்துப் பார்க்கிறேன்... நமது ஒற்றைத் துருவ உலகில், அமெரிக்கா தனது ஆதிக்கத்தைச் செலுத்துகிறது. இதர தேசங்கள் தமது சுயேச்சையான வெளியுறவுக் கொள்கையைக் கடைபிடிப்பதை நிராகரிக்கிறது.சர்வதேச ஒப்பந்தங்களை முன்னிறுத்தி நிர்ப்பந்திக்கும் வாஷிங்டன் ஒவ்வொரு நாடாய் தன் பிடிக்குள் கொண்டுவருகிறது. அமெரிக்க - இந்திய வேளாண் ஒப்பந்தம் இந்திய வேளாண்மையை காவு கொண்டுவிட்டது என்கிறார் டாக்டர் வந்தனா சிவா. "இந்தியா கோதுமையை ஏற்றுமதி செய்தாலும் சரி, இறக்குமதி செய்தாலும் சரி ‘கார்கில்' நிறுவனம் லாபம் அடைகிறது. அதே வேளையில் இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். குழந்தைகள் பட்டினியால் பரிதவிக்கின்றனர். கார்கிலின் சந்தைப் பங்கும், லாபமும் வளர்வதென்பது இந்தியாவில் பட்டினியும், வறுமையும் வளர்வதோடு நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருக்கிறது", என்கிறார் வந்தனா. கப்பற்படை பணியாளர் துறையின் முன்னாள் தலைவர் அட்மிரல் விஷ்ணு பகவத், மன்மோகன்சிங் மீது பணிவார்ந்த விமர்சனத்தை வைத்து இப்படி வினவுகிறார்:"முன் தாக்குதல் போர்களைத் தொடுப்பது, சர்வதேச சட்டங்களையும், ஐ.நா. சாசனத்தையும் மீறுவது, இன்னொரு தேசத்தின் மீது படையெடுக்கக்கூடாதென்ற ‘நூரம்பெர்க் விதிமுறை'களையே மீறிய பெருங்குற்றம் புரிந்திருப்பது.... என்று மீண்டும் மீண்டும் மேலாதிக்கம் காட்டிவரும் நாடு அமெரிக்கா. இரானில் அணு ஆயுதத் திட்டம் எதுவும் இல்லையென்று சர்வதேச அணு சக்திக் கழகமே சான்றிதழ் அளித்த பிறகும், 72 மணி நேரத்திற்குள் இரானில் 1200 இலக்குகள் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவேன் என்று மிரட்டுகிற நாடு அது. இரண்டாவது உலகப் போருக்குப் பின், அடுத்தடுத்த அமெரிக்கா ஆட்சியாளர்கள் 66 நாடுகளில் குண்டு வீசுவது, தாக்குவது, படையெடுப்பது ஆகிய கைவரிசைகளைக் காட்டி வந்துள்ளனர். இத்தகைய ஒரு நாட்டோடு எப்படி ‘கேந்திரமான உறவு' (Strategic partnership) பூண முடியும்."அமெரிக்க யுரேனியம், அணு உலை இவற்றை வாங்கினால் மட்டும்தான் எரிசக்தி தேவையை நிறைவேற்ற முடியுமென்று பிரதமர் வாதம் செய்கிறார். நமது ஆற்றல்களின் ஊற்றுக்கண்கள் ஏராளம். காற்றாலை மூலம் மின்சக்தி பெறும் வலுவை நாம் முழுமையாகக் கணக்கில் கொள்ளவேண்டும். எரிவாயுவிலிருந்து மின்னாற்றல் பெறும் ஏற்பாடு என்னவாயிற்று? சின்னஞ்சிறு நாடான நேபாளம் கூட பயன்படுத்தும் சூரிய ஆற்றல் மற்றும் உயிரியல் ஆற்றல்கள் போன்றவற்றை ஏன் புறம் தள்ள வேண்டும்? நமது நீர்மின் ஆற்றல் வசதி அளப்பரியது. பிறகு எதற்கு அணுசக்தி?அணுசக்தி கட்டுப்பாடு வாரிய முன்னாள் தலைவர் டாக்டர் ஏ. கோபாலகிருஷ்ணன் கூறுவதிலிருந்து சில துளிகள் இதோ!."கிழக்கு மற்றும் தென் மாநிலங்களில் கொட்டிக் கிடக்கும் நிலக்கரி வளம், இன்னும் போதுமளவு பயன்படுத்தப்படாத நீர் மின் ஆற்றல், இலகுவாகத் தோண்டக் கிடைக்கும் தோரியம் ஆகிய மூன்று ஆற்றல் ஆதாரங்கள் நமது நாட்டில் நிறைந்துள்ளன. சக்தி பாதுகாப்பு பற்றி உண்மையிலேயே இந்த அரசுக்கு அக்கறை இருக்குமானால் இந்த மூன்று ஆற்றல்களைப் பயன்படுத்த முனைப்பான, முன்னுரிமை மிக்க நடவடிக்கைகள் ஏன் எடுக்கப் படவில்லை?"இறக்குமதி செய்ய வேண்டிய அணு உலைகளுக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம் தேவை. அதற்கான தொழில் நுட்பம் இங்கில்லை. அதை இறக்குமதி செய்வதை 123 ஒப்பந்தம் அணுமதிக்கவில்லை."இப்படியான உலைகளைப் பெற பிரதமர் விழுந்தடித்துக் கொண்டு ஓடுவது, அந்நிய அணு சக்தி கம்பெனிகள் அவர்களது சரக்குகளை நமது தலையில் கட்டுவதற்கு ராஜ கம்பளம் விரிக்கத்தான்!"சொந்த ஆற்றல் ஆதாரங்களைப் புறந்தள்ளிவிட்டு, கெடுபிடி நிறைந்த - வரைமுறைக்கு உட்பட்ட - சந்தேகத்திற்குரிய ஒரு ஒப்பந்தத்திற்குப் போவது ஏற்கத் தக்கதே அல்ல".இன்றைய ஆளும் வர்க்கம் இழைக்கும் இத்தகைய பெரும்பிழைக்கு இந்திய மக்கள் மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டி வரும்.நன்றி : டெக்கான் கிரானிக்கல் (28/09/07)தமிழில் : எஸ்.வி.வி.


அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தம்என்ன தான் பிரச்சனை?

இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்குமிடையில் ‘123' ஒப்பந்தம் இருக்கும் போது ஏன் ‘ஹைட்' சட்டம் பற்றி பேசப்படுகிறது?123 ஒப்பந்தத்தின் இரண்டாவது பத்தியில், அவரவர் நாட்டின் சொந்த சட்டங்கள் மற்றும் சர்வதேச உடன்படிக்கைகள் போன்றவற்றுக்கு உடன்பட்டுத்தான் இந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்படும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது, ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள அத்துணை நடவடிக்கைளையும் முழுமூச்சாக நின்று நாம் முடித்து விட்டாலும் கூட, அமெரிக்க நாடாளுமன்றம் பச்சைக் கொடி காட்டினால் தான் ஒப்பந்தம் அமலுக்கு வரும்.அணு ஆயுதப் பரவல் தடுப்பு உடன்படிக்கையில் (Nuclear Non - Proliferation Treaty) கையொப்பமிடாத இந்தியாவுடன், அணுசக்தி சம்மந்தமான நடவடிக்கைகளில் அமெரிக்கா ஒத்துழைப்பதை முறைப்படுத்துவதற்காகவென்றே அமெரிக்க செனட்டில் இயற்றப்பட்டுள்ளதுதான் "ஹைட்" சட்டம். இந்த ஹைட் சட்டத்தின் நிபந்னைகளுக்கு உட்பட்டுத்தான் - அந்த நிபந்தனைகள் சரிவர பின்பற்றப்பட்டுள்ளதாக அவர்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே தான், 123 ஒப்பந்தம் அமலுக்கு வரும். எனவே தான், அமெரிக்காவின் ஹைட் சட்டம் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதாகி விட்டது.ஹைட் சட்டத்தின் நிபந்தனைகள் தான் என்ன?அமெரிக்காவுடனான அணுசக்தி ஒத்துழைப்பு குறித்து நமது நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு கேள்விக்கணைகள் தொடுக்கப்பட்டு, பிரச்சினை பூதாகரமாக வெடித்த போது, எல்லாம் கட்டுக்குள்தான், இருக்கிறது என்று உறுதியளித்த பிரதமர் மன்மோகன் சிங் அதனை நிரூபிக்க ஒன்பது உறுதிமாழிகளை வழங்கி எதிர்க்கேள்வி கேட்டவர்களையெல்லாம் வாயடைக்கச் செய்தார். இது நடந்தது 2006 செப்டம்பரில், ஆனால் சென்ற ஆண்டின் இறுதியில் இயற்றப்பட்ட ஹைட் சட்டம், மன்மோகனின் "பாயிண்ட்டுகளை" தவிடு பொடியாக்கிவிட்டது.உடனேயே ஹைட் சட்டம் குறித்து எதிர்ப்புகள் வெடிக்க, அரசு தரப்பில், 123 ஒப்பந்தத்தில் அனைத்தும் சரி செய்யப்பட்டு விடும் என்று உறுதி கூறப்பட்டது. ஆனால்...ஹைட் சட்டப்படி அமெரிக்க அதிபர் 123 ஒப்பந்தம் ஏற்பட்ட ஆறு மாதத்திற்குள் - அதாவது 2008 ஜனவரி மாதத்திற்குள் - இந்தியா அனைத்து நிபந்தனைகளையும் ஏற்று, சரிவர செயல்படுத்திய பாங்கை, அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு எடுத்துரைக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் இத்தகைய நற்சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும். அமெரிக்க அதிபரின் நன்மதிப்பினை ஈட்டும் விதத்தில் நம் நாட்டின் செயல்பாடுகள் இருத்தல் வேண்டும். நெடுங்கால நட்பு நாடான ஈரானை எதிர்த்து இருமுறை வாக்களித்தது போன்ற நன்னடத்தைகள் தொடர்ந்து தேவைப்படும்!நாட்டின் பிரதமர் ஏற்றுக் கொண்டுள்ள ஒப்பந்தத்தைச் சாடுவது முறையாகுமா?அரசு செய்து கொள்ளும் சர்வதேச ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் தரக்கூடிய அல்லது மறுக்கக் கூடிய அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லையென்கிறது நமது அரசியல் சாசனம். உலகின் 85 நாடுகளில், நாடாளுமன்ற ஒப்புதல் பெறாமல் எந்தச் சர்வதேச ஒப்பந்தமும் செல்லாது என்பது தான் நிலை. நமது நாட்டில் நிலவும் ஜனநாயக விரோத அம்சம் விரைந்து நீக்கப்பட வேண்டும்.நாடாளுமன்றத்தில் விவாதிக்கவே கூடாது அல்லது விவாதத்தை அனுமதிக்கவே முடியாது என்று கூறுவது எந்த வகை நியாயம்? அதிலும் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அதாவது காங்கிரஸ் கட்சிக்குத் தனி மெஜாரிட்டி கூட கிடையாது. இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவு இருப்பதனால் மட்டுமே பிரதமர் நாற்காலியை அழகு படுத்திக்கொண்டிருக்கும். ஒருவருக்கு, நாற்பதாண்டுக் காலம் நாட்டையே கட்டுண்டு விடும்படி செய்ய என்ன தார்மீக உரிமை உள்ளது?தமக்கு உறுதியான ஆதரவினை நல்கி வரும் இடதுசாரிகளைப் பார்த்து "வேண்டாமென்றால் விலகிக் கொள்ளட்டும்", என்று `நன்றி' பாராட்டும் பிரதமருக்கு மீடியாக்களின் விசில் பறக்கிறது! என்னே இவர்களின் ஜனநாயக மாண்புகள்?!மின்தேவையைப் பூர்த்தி செய்ய வல்ல அணுமின் உற்பத்தியை ஏன் குறை கூறவேண்டும்?நாட்டின் மொத்த மின் உற்பத்தியில், அணு மின் உற்பத்தியின் இன்றைய பங்கானது சுமார் மூன்று சதம் தான். அரசு உத்தேசித்துள்ள பிரம்மாண்ட முயற்சிகளனைத்தும் வெற்றி பெற்றால் கூட 2020 ஆம் ஆண்டில் அணுமின் உற்பத்தியின் பங்கு மொத்த மின் உற்பத்தியில் ஏழு சதத்தைத் தொடும். எனவே, மொத்த மின் தேவை பூர்த்தி என்பதெல்லாம் கலப்படமற்ற பொய்யே. இதற்கு நாட்டின் சுயாதிபத்திய உரிமையையும், வெளியுறவுக் கொள்கையையும் ஈடாக வைப்பது மதிகெட்ட பகடை உருட்டலாகும்.இறக்குமதி செய்யப்போகும் செலவுக் கணக்கு என்று பார்த்தால், அணு மின் உற்பத்திக்கு ஆகக் கூடிய செலவு, இதரவகையிலான மின் உற்பத்தி செலவைப் போல் இரு மடங்குக்கும் கூடுதலானது.. எதற்கு இத்தகைய அதீத விலை கொடுக்க வேண்டும்?உண்மையில், ஈனுலைகளை உற்பத்தி செய்யும் அமெரிக்க தனியார் கம்பெனிகளுக்குத்தான் அணு ஒப்பந்தம் மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும். 1986-ஆம் ஆண்டின் செர்னோபில் (ரஷ்யா) விபத்துக்குப் பிறகு ஈனுலைகளை வாங்குவாரின்றி தவித்துக் கொண்டிருந்த அமெரிக்கக் கம்பெனிகள் மூடுவிழாவை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருந்தன. ஜெர்மனி நாடு இருக்கிற அணு சக்தி நிலையங்களையே மெது மெதுவாக மூடி வருகிறது. இந்த நிலையில், இந்தியாவின் இறையாண்மையைவிட்டுக் கொடுத்தும், இந்தியச் சமானியனின் தலையில் மிளகாய் அரைத்தும், அமெரிக்கக் கம்பெனிகளுக்கு சூடான வியாபாரம்!இப்போது சொல்லுங்கள், உண்மையான தேசபக்தி உள்ளவர்கள் ஏற்கக் கூடியதா இந்த உடன்பாடு?
மீண்டும் பொதுத்துறை வங்கிகள் இணைப்பு முயற்சி ஸ்டேட் வங்கி விழுங்குகிறது சௌராஷ்டிரா வங்கியை
கௌதம்

புலி வருது; புலி வருது என்று பயந்ததுபோல் புலி உண்மையாகவே வந்து விட்டது. பொதுத்துறை வங்கிகள் இணைப்பின் முதல்படியாக ஸ்டேட் பாங்க் ஆப் சௌராஷ்டிராவை (SBI), ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் (SBS) இணைக்கும் முயற்சி பலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு வங்கிகளின் இயக்குநர் குழுவிலும் இதற்கான தீர்மானம் எவ்வித எதிர்ப்புமின்றி சுலபமாக நிறைவேறியுள்ளது. எப்போது இணையுமென்ற தேதி மட்டுமே அறிவிக்கப் பட வேண்டியிருக்கிறது.

UFBU முடிவு காற்றில்....."
பொதுத்துறை வங்கிகளை இணைப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டால் ருகுக்ஷரு ஒட்டு மொத்தமாக எதிர்க்கும்; வேலைநிறுத்தம் உட்பட அனைத்துப் போராட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு அத்தகைய முயற்சியினை முறியடிக்கும்" என்று 2005 மார்ச் மாதம் கூடிய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருந்தது. SBIயிலும், SBSலும் ஊழியர்களைப் பொறுத்தவரை NCBE தான் பெரும்பான்மை சங்கம். இரண்டிலும் அதிகாரிகள் மத்தியில் AIBOC தான் பெரும்பான்மை சங்கம். இயக்குநர் குழு கூட்டத்தில் இந்த இரண்டு சங்கங்களுமே மேற்படி இணைப்பிற்கு ஆதரவான நிலையை எடுத்தன.

UFBU முடிவு காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. உண்மையான இணைப்பு என்று வரும்போது இரண்டு சங்கங்களும் தமக்கு வசதியான நிலையெடுத்துள்ளன.இதனைத் தொடர்ந்து மற்ற ஆறு துணை வங்கிகளும் ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப் படுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

இணைப்பின் சூத்திரதாரி
1991ல் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நரசிம்மம் (முதல்) கமிட்டி, பொதுத்துறை வங்கிகள்இணைப்பு பற்றி பரிந்துரைத்துள்ளது. 1998ல் நரசிம்மம் - இரண்டாம் கமிட்டி அனை வலியுறுத்திக் கூறியதுடன் மேலும் சில நிபந்தனைகளுக்குட்பட்டு இணைப்பை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியது.
* இரண்டு பொதுத்துறை வங்கிகள் முன்முயற்சி எடுக்க வேண்டும்.
* மத்திய அரசாங்கம் அதற்கு அணுசரணையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* அத்தகைய இணைப்புகள் பணியாட்களையும், கிளைகள் எண்ணிக்கையையும் வெட்டி சுருக்கப் பயன்பட வேண்டும்.
* ஊழியர்களை ‘தேவையான' இடங்களுக்கு இடமாற்றல் செய்ய வேண்டும்.
* ‘பலவீனமான'வங்கிகளைக் காப்பாற்றுவதற்காக இணைப்புகள் நடத்தப்படக்கூடாது.
* பலமான வங்கிகள்தாம் இணைக்கப்பட வேண்டும்
இவைதாம் இணைப்பு பற்றி நரசிம்மம் (இரண்டாவது) பரிந்துரையின் சாராம்சம்.
அதன் முதல் படிதான் SBS ஐ SBI யுடன் இணைக்கும் முயற்சி. மற்ற துணை வங்கிகளும் இணைக்கப்பட்டால், கிளைகள் மூடல், ஆட்குறைப்பு, சாதாரணமக்களுக்கு வங்கிச் சேவை மறுப்பு உட்பட அனைத்து மக்கள் விரோத, ஊழியர் விரோத நடவடிக்கைகளும் அரங்கேறும்.
இத்துடன் நரசிம்மம் கமிட்டி செய்துள்ள மற்றொரு முக்கிய பரிந்துரை "பொதுத்துறை வங்கிகளில் மத்திய அரசின் பங்கு குறைந்தபட்சம் 51ரூலிருந்து 33ரூ ஆக குறைக்கப்படவேண்டும்" .

யானும் அவ்வண்ணமே கோரும்
அதைத்தான் ஸ்டேட் பாங்க் தலைவர் திரு. O.P. பட் சென்ற மாதம் ஒரு பொது நிகழ்ச்சியில் பேசியுள்ளார். திரு. H.N. சினோர், IBAவின் நிர்வாகக்குழுவின் முடிவாக "பொதுத்துறை வங்கிகளில் மத்திய அரசின் பங்கு 33ரூ அல்லது 26ரூ ஆகக் குறைக்கப்பட வேண்டும்" என்று மத்திய அரசிற்குப் பரிந்துரைத்துள்ளார்.ஏற்கனவே வங்கிகள் ஒழுங்குபடுத்தும் சட்டத்தில உள்ள சரத்துப்படி ஒருவர் எவ்வளவு பங்கு வைத்திருந்தாலும் அவருக்கு ஓட்டுரிமை அதிகபட்சம் 10ரூ என்ற உச்சவரம்பை நீக்குவதற்கான முயற்சி மத்திய அரசால் எடுக்கப்பட்டு வருகிறது.2008 ஏப்ரல் மாதத்திலிருந்து BASEL II விதிமுறைகள் முதல் கட்டமாகவும், 2009 ஏப்ரல் முதல் முழுமையாகவும் அமுலாகப் போவதாக மத்தியஅரசு அறிவித்துள்ளது.

அபாயம் ஆரம்பம்
இது நடைமுறைக்கு வந்தால் இன்றைக்குப் பெயரளவில் அந்நிய வங்கிகளுக்கு உள்ள கட்டுப்பாடு கூட (கிளைகள் திறப்பதில், முன்னுரிமைக்கடன் வழங்கப்பட வேண்டும் என்பதில்....) முற்றிலுமாக நீக்கப்படும். யார் வேண்டுமானாலும் இந்திய வங்கித்துறையில் சமமாக விளையாடலாம். அதற்கான சமதள ஆடுகளம் (Level Playing Field) அமைத்துத் தரப்படும்.இவையெல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போதுதான் மத்திய அரசு எவ்வாறு மற்றும் உலக வங்கியின் சதியை நிறைவேற்றும் கருவியாக செயல்பட்டு வருகிறது என்பதை உணர முடியும். ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகளை ஸ்டேட் வங்கியோடு இணைத்துவிட்டு, கிளைகளையும், ஊழியர்களையும் வெட்டிச் சுருக்கி குறைத்துவிட்டு, அரசு வசமுள்ள பங்கினை 33 ரூ (அ) 26ரூ ஆகக் குறைத்துவிட்டு, ஓட்டுரிமையின் உச்ச வரம்பை நீக்கிவிட்டு, அந்நிய பன்னாட்டு பகாசூர கம்பெனிகளுக்கு ஸ்டேட் வங்கியை தங்கத்தட்டில் வைத்து தாரை வார்ப்பதுதான் அந்த சதி ஸ்டேட்வங்கி ஒரு அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கியானால் என்ன நிலை ஏற்படும் என்பதை ஊகிப்பது ஒன்றும் கடினமல்ல.

சதி வலையும் சலுகைப் பொறியும் (Trap)
இந்த சதியின் முதல்படிதான் ஸ்டேட் பாங்க் ஆஃப் சௌராஷ்டிராவை ஸ்டேட் வங்கியுடன் இணைப்பது, என்ன விலை கொடுத்தாலும், அதை சுமுகமாக முடிக்க வேண்டும் என்பதற்காக ஊழியர்களுக்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.28.09.07ல் டெல்லியில் கூடிய SBI இயக்குநர் குழுவில், SBS ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணிக்காலத்தை சமமாக 1:1 என்ற அடிப்படையில் ஏற்றுக் கொள்வதென்றும்,SBS பணியாளர்களுக்கும் ஸ்டேட் வங்கி பணியாளர்களைப் போல் பென்ஷன், பி.எப்., கிராஜிவிடி என்று மூன்று ஓய்வூதிய சலுகைகளை வழங்குவதென்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மற்ற வங்கி ஊழியர்களைப் போல் SBS ஊழியர்களில் பெரும் பகுதியினர் பி.எப் தேர்வு செய்வதவர்களாகவும், சிறுபகுதியினரே பென்ஷன் தெரிவு செய்தவர்களாகவும் உள்ளனர். பென்ஷன் தேர்வு செய்ய இரண்டாவது வாய்ப்பிற்காகப் பெரிய அளவில் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் பென்ஷன் கூடுதல் சலுகையாக மூன்றாவது பலனாக சிக்கலில்லாமல் கிடைக்கும் என்றால் இயற்கையாகவே ஊழியர்களிடம் இணைப்பை எதிர்க்கும் கூர்முனை மழுங்கடிக்கப்படும் அல்லவா? அதைத்தான் மத்திய அரசு பயன்படுத்தி தனது திட்டத்தை நிறைவேற்றத் துடிக்கிறது.

மூன்று சங்கங்களின் வேலைநிறுத்தம்
மிகச் சரியாக இதனைப் புரிந்துகொண்ட AIBEA மற்றும் AIBOA சங்கங்களின் தனித்தனியான அறைகூவலுக்கிணங்க 27.09.07 அன்று ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகளில் நாடு தழுவிய மகத்தான வேலை நிறுத்தம் நடைபெற்றது.30.9.07 அன்று கட்டாக் நகரில் நடைபெறும் UFBU கூட்டத்தில் இந்த பிரச்சினை நிச்சயம் முன்னுக்கு வருமென்று தெரிகிறது.சர்வதேசநிதி நிறுவனங்களின் கட்டளைப்படி இந்தியாவில் நடைபெறும் நிதித்துறை சீர்திருத்தங்களை எதிர்க்கும் வகையில் ஒன்றுபட்ட போராட்டத்தினை உருவாக்கி நடத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். அந்த திசைவழியில் வங்கித்துறையிலும், பொதுவாக நடைபெறும் போராட்டங்களிலும் முழுமையாக இணைவதன் மூலமே பிடிவாதமான மத்திய அரசை பின்னுக்குத் தள்ள முடியும். இந்தப் பார்வையில் சரியான நேர்க்கோட்டில் எல்லா சங்கங்களும் நிற்பதில் நிலவும் பிரச்சினை அபாயங்களை முறியடிக்க உதவாது.

ICICI : தொடரும் அராஜகங்கள்
3 பெண் குழந்தைகளும் தமது தந்தையை இனி புகைப்படத்தில் தான் பார்க்க முடியும். அதற்கு சமாதானமாக, வெட்கமில்லாமல் 15 லட்சம் ரூபாயைக் கொடுத்திருக்கிறது ஒரு தனியார் வங்கி - வேறு யார், அராஜக ICICI வங்கிதான்!
50 ஆயிரம் ரூபாய்க் கடனை திருப்பிச் செலுத்தாததற்கு ஆள்களை திரும்ப திரும்ப அனுப்பி மிரட்டியதால், மும்பை மாநகரின் பிரகாஷ் சர்வங்கர் (38 வயது) இந்த செப்டம்பர் மாதம் 18ம் தேதி தற்கொலை செய்து கொண்டு விட்டார். ஹைதராபாத் யாதய்யா கொலைக்குப் பிறகு (BWU: ஜூலை 2007) மீண்டும் செய்தியில் ICICI வங்கியின் பெயர் மோசமாக அம்பலமானது.
பிரகாஷ் சர்வங்கரின் 6 வயது பிஞ்சுக்குழந்தை பிரஜக்தா ‘அப்பாவை அடிப்போம் னு சொல்லி மிரட்டினாங்க' என்கிறது. தற்கொலைக்கு முன் எழுதிய வாக்குமூலத்தில், ‘என்னை (ICICI ஏஜெண்டுகள்) தற்கொலைக்குத் தள்ளிவிட்டார்கள். செத்து கூடப் போ, ஆனால் எங்களுக்குப் பணம் வந்தாகணும் என்று மிரட்டினர்,' என்று எழுதி வைத்திருக்கிறார். பிடியரிசி இல்லாத கொடுமையில் செத்தவனுக்குப் படி அரிசி வாய்க்கரிசி போடுவது மாதிரி தனது ‘குற்றத்தைக்' கழுவ 15 சில லட்சம் ரூபாயை குடும்பத்தின் பெயரில் முதலீடு செய்து மாதாமாதம் வட்டி வழங்குவோம் என்று சொல்லி இருக்கிறது ICICI வங்கி.
அண்மையில் சென்னையில் கூட ஒரு தற்கொலை நடந்திருக்கிறது. கடன் அட்டைகளைப் பரிவோடு வியாபாரம் செய்கிற இந்த நிறுவனங்கள், வசூலை மட்டும் தாதாக்களின் பொறுப்பில் விட்டிருக்கின்றன. கட்டுப்பாட்டாளர்கள் (Regulators) இன்னும் எத்தனை மரணங்களுக்குத் தான் காத்திருப்பார்கள்?
சம்புகர்கள் நிலம் ஆதி
அன்புள்ள இஸ்மாயிலுக்கு,இந்தக் கடிதம் உன்னிடம் வந்து சேர்வதற்குள் இன்னும் என்னென்ன நடந்திருக்குமோ? இரண்டு பகுதிகளை இணைக்கின்ற ஒன்றினை பாலம் என்கிறோம். இராமர் பாலமோ மனிதர்களை இருவேறு பகுதிகளாகப் பிரித்துப் போட்டிருக்கிறது. ஆச்சரியம் இத்தோடு நின்றுவிடவில்லை. பேருந்துகள் கொளுத்தப்படுகின்றன. பிணங்களின் கருகிய வாசம் ஒவ்வொருவரின் மனசாட்சிகளிலும் அலைபாய்கின்றன.கொடுமைகள் இத்தோடு முடிந்துவிடுவதில்லை. வார்த்தைகள் ஆயுதங்களாக பிரயோகிக்கப்படுகின்றன. ஆயுதங்களில் ஒட்டிக் கிடக்கும் மனிதர்களின் இரத்தப் பிசுபிசுப்பில் மரணங்கள் ஊர்ந்து செல்கின்றன. இன்னும் இன்னும் எத்தனை பிணங்களால் நிறையுமோ பலிபீடங்கள் யாருக்கும் தெரியும்?பெங்களூருக்கருகில் எரிந்து கருகிய பேருந்து தெரிந்த தொலைக்காட்சிப் பெட்டியில் காட்சிகள் மாறிவிட்டன. யுவராஜ் சிங்கின் ‘சிக்சர்களும்' தோனியின் முடிக்கற்றைகளும் பழைய பிம்பங்களை மறக்கடித்து விடுகின்றன. கலவரங்களால் நிகழும் உயிர்ப்பலிகள் ஒருவரி அஞ்சலியாக சுருங்கிப் போய் உணர்ச்சிகளை வெளிக்காட்டாத செய்தி வாசிப்பாளர்களின் வார்த்தைகளில் சிக்கி விளம்பரங்களுக்கு நடுவில் ஆத்மா சாந்தியடையாமல் அலைபாய்கின்றன.‘ராமர் என்ன என்ஜீனியரா? வால்மீகி சொன்னதுபோல் ராமர் சோமபானம் அருந்தினார் என்றா சொல்லிவிட்டேன்?'‘அப்படியானால் கல்லணை கட்டிய கரிகால்வளவன் மட்டும் என்ன என்ஜீனியரா?'‘ராமரைப் பற்றிச் சொன்னவரின் தலையையும் நாக்கையும் அறுத்துக் கொண்டுவருவருக்கு, எடைக்கு எடை தங்கம் கொடுக்கப்படும்.'அன்பைப் பேசுவதான கடவுளின் பெயரால் ஆயுதங்களைப் போலவே நாக்குகள் வார்த்தைகளை வாளைப் போல் வெட்டி வீசுகின்றன. காதுகள் கூசுகின்றன. வேதம் படித்ததற்காகத் தலை துண்டிக்கப்பட்ட சம்புகர்கள் நிலமெங்கும் சிதறிக் கிடக்கிறார்கள்.இத்தனைக்கும் காரணமான இராமர் பாலமோ சேதுக்கால்வாய்க்கு வழி விடாமல் எந்த சீதையின் வரவுக்காகக் காத்திருக்கிறதோ, தெரியவில்லை. நாசா விண்வெளி விஞ்ஞானிகள் வெளியிட்ட கடலுக்கடியில் தெரியும் நீண்ட மணல் திட்டு ஆதம் பாலமா? இராமர் பாலமா? காற்றோட்டத்திலும், நீர் - எதிர் நீர் திசைப்போக்கிலும் நிலத்தட்டுக்களின் அசைவுகளாலும் இயற்கையாகவே திரண்ட மணல் மேடா? இலங்கைக்குச் சென்று சீதையை மீட்டு வருவதற்காக இராமர் கட்டிய பாலமா? வானரங்கள், எடுத்துப்போட்ட கற்குவியல்கள் அங்கிருக்குமா? அணில் சுமந்த மணல் துகள்கள் அதிலிருக்குமா?‘பதினேழரை லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இராமாவதாரம் கட்டிய பாலம் என்று இதிகாசங்கள் சொல்கின்றன. இது இறை நம்பிக்கை சார்ந்தது. இதிலென்ன கேள்வி?' - இப்படி ஒரு சிலர்.‘தற்போதுள்ள மனித இனச் சுவடுகளின் வழியே சென்று பார்த்தால் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உயிரினமே இல்லை. குரங்குகள் கூட தோன்றியிருக்காத ஒரு காலகட்டம். அப்படியென்றால் பதினேழரை லட்சம் ஆண்டுகளுக்கு முன் இராமர் பாலம் கட்டப்பட்டது என்பதை ஆராய்ச்சிப்பூர்வமாக நம்பமுடியாது' - இப்படி ஒரு சிலர்.எதை நம்புவது? எதை நம்புகிறோமோ இல்லையோ எது சரியானது என்று காலம் காட்டிவிடும்.சூரியன் பூமியைச் சுற்றிவருகிறது என்று தாலமியின் கண்டுபிடிப்பில் நம்பிக்கை வைத்திருந்த போது சூரியன்தான் மையம். பூமியும் பிற கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன என்று சொன்ன கோபர் நிகஸ்ஸின் வார்த்தைகளைச் சீரணிக்க முடியாமல் ஸ்தம்பித்துப் போனது உலகம். ஆனால் கடைசியில் கோபர் நிகஸை உலகம் சுற்றிவந்தது.பூமி தட்டையானது என்று பைபிள் குறிப்பிட்டது. பூமி உருண்டையானது என்று டெலஸ்கோப்பை வைத்துக் காட்டிய கலிலியோவை பைத்தியக்காரன் என்று பழித்தது. சிறையிலடைத்தது. ஆனால் கலிலியோவை என்ன செய்தாலும் கடைசிவரை பூமி தட்டையாக மாறவேயில்லை. எந்தக் கட்சியால் முதலில் தொடங்கப்பட்டதோ அதே கட்சியால் எதிர்க்கப்படுகிறது ஒரு திட்டம். ஜனநாயகத்தின் சக்தியைப் பார்த்தாயா நண்பனே.464 கடல் கிலோ மீட்டர்கள் வீண் பயணத்தைக் குறைக்கவும், 36 மணி நேர விரயத்தை மிச்சம் பண்ணவும் தீட்டப்பட்ட சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை இராமர் பாலம் வழி மறிக்கிறது. வேறு எந்தப் பாதையில் கால்வாய் வெட்டினாலும் சுற்றுச்சூழலுக்கு அதிகக் கேடுகள்தான் என்று சொல்கிற வல்லுனர்களின் ஆய்வுகள் கடலுக்கடியில் கொட்டப்படுகின்றன.வெறும் புராணங்களிலும் இதிகாசங்களிலும் இருந்து தரவுகள் தயாரிக்க முடியாத தொல்லியல் துறை வரலாற்று பூர்வமான அடிப்படையில் இராமர் பாலம் என்பது இல்லை - ராமர் வாழ்ந்ததற்கான ஆதாரம் கிடையாது என்று நீதிமன்றத்தில் அரசுக்கு எதிரான வழக்கில் பதில் மனு தயாரித்தது குற்றம் என்றால் கோபர் நிகஸ் சொன்னது குற்றம். கலிலியோவின் கண்டுபிடிப்பு குற்றம்.இதயங்களில் பாலங்களை இடித்துத் தகர்த்துவிட்டு இந்திய சமுத்திரத்தில் எந்த பாலத்தை இவர்கள் காப்பாற்றப் போகிறார்கள்? மசூதி இருந்த இடத்தை இராம ஜென்மபூமி என்பதும், மணல் திட்டை இராமர் பாலம் என்பதும் அரசியலுக்கு எதிரான ஆன்மீக விளையாட்டு. எந்த நேரத்திலும் ‘ராம் ராம்' என்று சொல்லும் ராம பக்தர்கள்தான் இதற்கு பலியாகப் போகிறார்கள்.இவர்களது நம்பிக்கைப்படியே, இராமர் அன்று கால்நடையாக வந்தார். கடக்கப் பாலம் தேவைப்பட்டது. இன்று வந்தால் கப்பலோடு தான் வருவார். கடக்க கால்வாய் தேவைப்படலாம். நீ என்ன நினைக்கிறாய் நண்பா?இப்படிக்குவிஜய்

Friday, July 18, 2008

பாபாசாகேப் பேசுகிறார்
வெளியுறவுத்துறை கொள்கையே நம்மை தனிமைப்படுத்திவிட்டது - III
இந்தியாவில் உள்ள பட்டியல் சாதியினர் போல் கடும் வேதனைக்கு ஆட்படும் மக்கள் உலகில் வேறு எங்கேனும் உள்ளனரா என்று நான் ஆச்சரியத்துடன் நோக்கினேன். வேறு எவரையும் நான் காண முடியவில்லை. இருந்தும் கூட பட்டியல் சாதியினருக்கு உதவிகள் எதுவும் ஏன் வழங்கப்படவில்லை? முஸ்லிம்களைப் பாதுகாப்பது குறித்து அரசு காட்டிவரும் அக்கறையை இதனுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். பிரதமரின் முழு நேரமும் கவனமும் முஸ்லிம்களின் பாதுகாப்புக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எங்கெல்லாம் எவ்வெப்போதெல்லாம் பாதுகாப்பு தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் அதனை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற விருப்பத்தில் நான் யாருக்கும், பிரதமருக்கும் கூடப் பின்தங்கியவனில்லை.ஆனால் நான் அறிந்து கொள்ள விரும்புவது என்னவெனில், பாதுகாப்பு தேவைப்படும் ஒரே பிரிவு மக்கள் முஸ்லிம்கள் மட்டும் தானா? பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் இந்தியக் கிறித்துவர்கள் ஆகியோருக்கு பாதுகாப்பு தேவை இல்லையா? இந்த சமூகங்களைக் காக்க பிரதமர் எத்தகைய அக்கறையைக் காட்டினார்? இதுவரை நான் எதையும் காணவில்லை. உண்மையில் முஸ்லிம்களைவிடக் கூடுதல் அக்கறையும் கவனமும் தேவைப்படும் மக்கள் இவர்களேயாவர்.அரசாங்கத்தினால் பட்டியல் சாதியினர் புறக்கணிக்கப்படுவது குறித்து எனது கடுஞ்சினத்தை, உள்ளக் கொதிப்பை என் மனதிற்குள்ளேயே அடக்கி வைக்க என்னால் முடியவில்லை. பட்டியல் சாதியினரின் பொதுக்கூட்டம் ஒன்றில் எனது உணர்வுகளை வெளிப்படையாகக் கூறினேன். அவர்களுக்கு 12.5 சதவிகிதப் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்த சட்டத்தினால், பட்டியல் சாதியினர் பலனடையவில்லை என்ற எனது குற்றச்சாட்டு உண்மையா என மாண்புமிகு உள்துறை அமைச்சர் கேட்டார். அக்கேள்விக்கான பதிலில் மாண்புமிகு உள்துறை அமைச்சர் எனது குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்றும் கூறினார். அதைத் தொடர்ந்து, அரசுப் பணிகளில் அண்மையில் பட்டியல் சாதியினரின் பிரதிநிதிகள் எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டனர் என்று, இந்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பினார். அதற்கு பல துறைகள் ‘இல்லை' என்ற பதிலை அனுப்பியது என்று என்னிடம் கூறப்பட்டது.எனக்குக் கிடைத்த தகவல் சரியாக இருக்குமேயானால், மாண்புமிகு உள்துறை அமைச்சர் கொடுத்த பதில் குறித்து நான் எந்தவிதக் கருத்தையும் கூறத் தேவையில்லை. எந்த மக்களிடையே நான் பிறந்தேனோ அந்த பட்டியல் சாதியினரின் மேம்பட்ட நிலைக்காக, சிறுவயது முதலே நான் என்னை அர்ப்பணித்துக் கொண்டேன். என் மனதில் வேறு எந்த உணர்வுகளும் இல்லை என்பதல்ல; எனது சொந்த நலன்களை மட்டும் நான் கருத்தில் கொண்டிருந்திருப்பேனேயானால், நான் விரும்பியதைப் பெற்றிருப்பேன்; காங்கிரசில் நான் சேர்ந்திருந்தால், அந்த அமைப்பின் மிக உயர்ந்த பதவியையும் பெற்றிருப்பேன். ஆனால் நான் கூறியதுபோல, பட்டியல் சாதியினர் மேம்பாட்டிற்காக நான் என்னை அர்ப்பணித்துக் கொண்டேன். எந்த நோக்கத்தை அடைய வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதில் குறுகிய மனச் சிந்தனையுடன் இருப்பது நல்லது என்ற முதுமொழியை நான் பின்பற்றியிருக்கிறேன். ஆகவே, பட்டியல் சாதி மக்களின் லட்சியம் எவ்வளவு கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது என்பதைக் காணும்போது, என் மனம் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும் என்பதை நீங்கள் நன்கு புரிந்து கொள்ள முடியும்.எனது உணர்வைத் தூண்டிய மூன்றாவது விஷயம் எனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது மட்டுமல்ல; உண்மையில் பெரும் துன்பத்தையும் கவலையையும் கூட அது ஏற்படுத்தியது. நமது நாட்டின் வெளியுறவுக் கொள்கையையும் அத்துடன் இந்தியாவின் பால் பிற நாடுகள் கொண்டிருக்கும் அணுகுமுறையையும் தொடர்ந்து கவனித்து வருபவர்கள், நம்மால் அவர்கள் கொண்டுள்ள போக்கில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை உணராதிருக்க முடியாது. 1947 ஆகஸ்டு 15 அன்று ஒரு சுதந்திர நாடாக நாம் வாழ்வைத் தொடங்கிய போது, எந்நாடும் நமக்குத் தீங்கு செய்ய வேண்டும் என்று எண்ணவில்லை. உலகின் ஒவ்வொரு நாடும் நமது நண்பனாகத் தான் இருந்தது. நான்காண்டுகளுக்குப் பின்னர் இன்றோ நமது நண்பர்கள் அனைவரும் நம்மை கைவிட்டுவிட்டனர். நமக்கென நண்பர்கள் யாரும் இல்லை. நாமும் நம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டோம்; தன்னந்தனியாகப் போய்க் கொண்டிருக்கிறோம். அய்க்கிய நாடுகள் அவையில் நமது தீர்மானங்களை ஆதரிக்க எவரும் இல்லை.நமது வெளியுறவுத் துறை கொள்கையை நினைக்கும் போது பிஸ்மார்க்கும் பெர்னார்ட் ஷாவும் கூறியதை நான் நினைத்துப் பார்க்கிறேன். "அரசியல் என்பது லட்சியத்தை அடைவதற்கான பந்தய ஆட்டமல்ல; மாறாக அரசியல் என்பது சாத்தியக் கூறுகளை எய்தும் பந்தய ஆட்டமாகும்'' என்று பிஸ்மார்க் கூறியுள்ளார். "நல்ல குறிக்கோள்கள் சிறந்தவைதான். ஆனால் அவை மிகவும் நல்லவையாக இருப்பது, பல நேரங்களில் ஆபத்தானவையாக இருக்கும் என்பதை எவரும் மறந்துவிடக்கூடாது' என்று அண்மையில் பெர்னார்ட் ஷா கூறினார். உலகின் இரு பெரும் மேதைகள் கூறிய இந்த விவேகமிக்க கருத்துகளுக்கு முற்றிலும் எதிரானவையாக நமதுவெளியுறவுக் கொள்கை உள்ளது.
உடைக்க முடியாத பெரியார் ‘கோடு’
நன்றியை எதிர்பாராது காலமெல்லாம் தங்களுக்காக வாழ்ந்து, தன் இறுதி மூச்சடங்கும் வரை தங்களுக்காக உழைத்து, மறைந்து 35 ஆண்டுகள் ஆனாலும் கூட ஆரியத்திற்கு அடங்காத எதிர்ப்பலைகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் தந்தை பெரியார் என்னும் மகத்தான மாமனிதருக்கு தமிழர்கள் தங்கள் நன்றிகளைக் காட்டாத நாளில்லை; நினைக்காத நொடியில்லை.கடுமையான கொள்கைகளை பிரச்சாரம் செய்து வந்தாலும், தங்கள் தலை நிமிர்வுக்குக் காரணம் இவரே என உணர்ந்த மக்களால் தந்தை பெரியாரைப் போல கொண்டாடப்பட்ட தலைவர் வேறு எவரும் இருக்க முடியாது. பெரியாரின் பெயர் சுமக்காத ஊர்கள், நகரங்கள், சிற்றூர்கள் எதுவும் இல்லை தமிழ்நாட்டில். தங்கள் வீட்டுக்கு, வீதிக்கு, நகருக்கு, குழந்தைக்கு, நிறுவனத்துக்கு பெரியார் என்ற தங்கள் அடையாளத்தைச் சூட்டி அழகு பார்த்தனர் தமிழர்! காவியுடுத்திய குன்றக்குடி அடிகளாரும் பெரியார் முந்திரி தொழிற்சாலை அமைத்து பெரியாரை நினைவு கூர்ந்தார்.அறிவியல் சிந்தனைகளைப் பரப்பிய பெரியாரின் பெயரையே தங்கள் கண்டுபிடிப்புக்குச் சூட்டி பெருமைப்பட்டதும் தமிழர்களே! சென்னைப் பல்கலைக்கழக விலங்கியல் துறைப் பேராசிரியர் டாக்டர் ஜி.சுந்தரராசுலு ஆட்ரியாடிக் கடல் பகுதியில் கணுக்கால்களின் மூதாதை என்று கருதப்படும் புதிய உயிரியைக் கண்டுபிடித்தார். தந்தை பெரியாருக்கு நன்றி செலுத்தும் விதமாக அதற்கு “LOBO Padus Periyar” என்று பெயரிட்டார்.அந்த வரிசையில் இன்னொரு தமிழச்சி! இவர் அய்.அய்.டி.யைக் கிடுகிடுக்க வைக்கும் சமூகநீதிப் புயல்! அசந்தால் ஆளை விழுங்கும் அய்.அய்.டி. பாம்புகளை அசராமல் அடிக்கும் பெரியாரின் கைத்தடி. இவரது சமூகநீதிப் போராட்டங்களுக்காகவே தமிழ்நாடு அரசின் கல்பனா சாவ்லா விருது வென்ற வீராங்கனை. தகுதி திறமை பேசி இடஒதுக்கீட்டை மறுக்கத் துடிக்கும் அய்.அய்.டி., வளாகத்துக்குள் இவருக்குள்ள தகுதி எந்தப் பார்ப்பானுக்கும் கிடையாது.633 ஆராய்ச்சிக் கட்டுரைகள், 33 புத்தகங்கள், 11 முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர்கள், 57 முதுகலை ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருக்கும் வழிகாட்டி என இவருக்கிருக்கும் தகுதிப் பட்டியலுக்கு தனிப்புத்தகம் போடலாம். கணக்குக்காக இவர் எழுதும் எண்கள் மட்டுமல்ல. இவரது ஆய்வுகளின் எண்ணிக்கையே நம்மை பிரம்மிக்க வைக்கிறது.தந்தை பெரியார் எனும் வரலாற்றுப் புரட்சியாளரை கணக்கு முறையில் ஆய்வு செய்ய முடியுமா? என புருவம் உயர்த்தியோரை, தனது “Fuzzy and Neutrosophic analysis of Periyar’s views on untouchability” நூலின் மூலம் மேலும் வியக்க வைத்தவர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தந்தை பெரியார் பாடுபடவில்லை என்று புரட்டுவாதிகள் பொய் விமர்சனங்களை எழுதிக் கொண்டிருந்தபோது, அதற்கு பதில் தரும் விதமாக வந்தது இந்நூல். நூல் வெளிவந்த இரண்டு ஆண்டுகளில் லட்சக்கணக்கானோரால் பதிவிறக்கம் செய்யப்பட்டு படிக்கப்பட்டுள்ளது. கடந்த 2008 ஜனவரி மாதத்தில் மட்டும் 4,304 பேர் இந்நூலைப் பதிவிறக்கம் செய்திருக்கிறார்கள் எனில் இதன் சிறப்பு விளங்கும்.அதன்பிறகு வேத கணிதம் என்று இந்துத்துவாவினர் பரப்பும் பொய்யுரையை சந்தியில் நிறுத்தி வேதமா? கணிதமா? எனக் கேள்விகேட்டு, ஆய்வாளர்கள் மத்தியில் வேத கணிதம் (?) என்பதன் தன்மையை விளக்கிய “Vedic Mathematics: Vedic or Mathematics: A Fuzy and Neurosophic Analysis” நூல் ஆரியம் பூச நினைத்த அறிவியல் சாயத்தை வெளுக்கச் செய்தது.அதனைத் தொடர்ந்து அவர் எழுதியுள்ள நூல் “New Classes of codes for Cryptologists and Computer Scientists”. இந்நூலில் கணினி வல்லுநர்களுக்கும் அறிவியலாளர்களுக்கும், பயன்படக் கூடிய புதிய ரகசியக் குறியீடுகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார். கணிதவியலாளர்களுக்கு மட்டுமன்றி ரகசியக் குறியீடுகளை உருவாக்குவோருக்கு இந்நூல் பெரும் பயன்தரும். தகவல் பரிமாற்றத்திலும், பாதுகாப்பு காரணங்களுக்கும் பயன்படப்போகும் இந்தப் புதிய குறியீட்டினை, அவ்வளவு எளிதில் யாராலும் உடைத்துவிட முடியாது. குறியீட்டை உடைக்கும் திறன்பெற்றவர்களுக்கு சவால் விடும் இந்தப் புதிய குறியீட்டு முறைக்கு தந்தை பெரியாரின் 125ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி பெரியார் லீனியர் கோட் (Periyar Linear Code) என்று பெயரிட்டுள்ளார்.சமூகத்தில் மனித நேயக் கருத்துகளைப் பரப்பி பெரியார் ஆற்றிய தொண்டை நினைவு கூறும் வகையில் இந்தக் கண்டுபிடிப்புக்கு அவர் பெயரைச் சூட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார் ஆய்வாளர் வசந்தா கந்தசாமி. தந்தை பெரியார் 125ஆம் பிறந்த நாள் நினைவாக பெயரிடப்பட்ட இப்புதிய குறியீட்டு முறையை எகிப்து, அமெரிக்கா, அர்ஜென்டினா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் முறையே பேரா.முனைவர் அடெல் ஹெல்டு பிலிப்ஸ், பேரா.பால்பி. வாங், பேரா.டீகோ லூசியோ ரேபோபோர்ட் ஆகியோர் அடங்கிய குழு ஆய்வுகளுக்கு உட்படுத்தி இது சரியானதுதான் என ஒப்புக் கொண்டுள்ளது.அதனால் இந்நூல் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 2008இன் தொடக்கத்தில் வெளிவந்துள்ளது. உலகெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்நூலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பெரியார் லீனியர் கோட் பற்றிய தனிப் புத்தகம் ஒன்றும் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே தயாராகி வருகிறது. விரைவில் அதன் வெளியீடும் இருக்கிறது. இந்நூல் வேதத்திலும், புராணத்திலும் அறிவியல் இருக்கிறது; அணுகுண்டு பார்முலா இருக்கிறது என்று கழிவுகளில் அரிசி தேடும் ஆரியக் கூத்துகளின் மத்தியில் தனிப் பெரும் ஆய்வாளராக புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி அதற்குத் தன் நன்றி அடையாளமாக பெரியார் பெயரைச் சூட்டியுள்ள திருமதி வசந்தா கந்தசாமி அறிவியல் வரலாற்றில் மட்டுமல்ல; சமூகநீதி வரலாற்றிலும் தனி இடம் பெறக்கூடியவர்.(நன்றி: உண்மை மாதமிரு இதழ்)
வெளக்குமாத்துக்குப் பட்டுக் குஞ்சம்: கமலஹாசனுக்கு உலக நாயகன் பட்டம்!தீசுமாசு டி சில்வா
ஜூன் 12. ‘தசாவதாரம்’ ரிலீசுக்கு ஒரு நாள் முன்தினம். வழக்கொன்று வந்தது உச்ச நீதிமன்றத்தில். வழக்கம்போல் தள்ளி வைக்கவில்லை. காரணம், வழக்காடியவர்கள் புறப்பட்ட இடம் அப்படி. விடுமுறையென்றாலும் வீட்டிலிருந்தேனும் விசாரித்தாக வேண்டும்! விசாரித்தார்கள். “முதலில் படத்தைப் பாருங்கள். பிறகு போடுங்கள் வழக்கை” என்றார்கள். ‘நாங்கள் இருக்கிறோம்’ என்று ரகசிய ஜாடை காட்டி, தைரியமூட்டி சென்னைக்கு அனுப்பி வைத்தார்கள். படம் வந்து வாரம் நான்காகி விட்டது. வழக்கையும் காணோம், ஒரு புண்ணாக்கையும் காணோம். என்னாச்சு? 12 ஆம் நூற்றாண்டில் சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் நடந்த பங்காளிச் சண்டையைச் சொல்லி இந்துக்களின் மானத்தைக் கூண்டிலேற்றுகிறார் கமல் என்ற குற்றச்சாட்டில் துளியும் உண்மையில்லை என அறிந்து, வருந்தி ஜகா வாங்கி விட்டார்களா? ‘இருக்கலாம்’ என்பவர்கள் அப்பாவிகள்.சுஜாதா செத்துப்பூட்டாரு, பாலச்சந்தருக்கு வயசாயிடுச்சு, மணிரத்னத்துக்கோ முடியல. கொஞ்சம் வெவரஞ் தெரிஞ்சவாளா இருக்குற இவரையும் பகைச்சுக்கிட்டா கோடம்பாக்கத்துல நமக்கு ஆளில்லாமப் போயிடுமேங்கிற கரிசனையால அடக்கி வாசிக்கிறாங்களோ....? அப்படியும் இருக்கலாமென்பவர்கள் உண்மையின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்கிறார்கள். இப்படி யோசித்துப் பார்க்கலாம்.ஓடாத படத்தைத் தடை செய்து ஓடவைக்க சில தயாரிப்பாளர்களே பினாமிகளின் பெயரில் கோர்ட்டுக்குப் போவார்கள். ஆஸ்கார் ரவிச்சந்திர அய்யரின் பினாமியாக இராம. கோபாலய்யர் ஏனிருக்கக்கூடாது? போஸ்டரில் பெயர் இல்லாவிட்டாலென்ன? ‘சைலன்ட் பார்ட்னராக’ இருக்கலாமில்லையா?வரலாற்று ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட கற்பனைக் கதை எனும் அறிவிப்புடன் படம் ஆரம்பிக்கிறது. இந்த அறிவிப்பு மட்டும் போதுமா? வரலாறு எங்கே முடிகிறது, கற்பனை எங்கே தொடங்குகிறது என்று சொல்ல வேண்டாமா? இரண்டாம் குலோத்துங்கன், ரங்கராஜன் நம்பி சைவ - வைணவ யுத்தம், ‘ஓம் நமோ நாராயண நமஹ...’ இவையெல்லாம்தான் வரலாறு என்று ஒரு கூட்டம் நம்பிப் படம் பார்த்துக் கொண்டிருக்க, மல்லிகா ஷெராவத், பிளெட்சர், கிளப் டான்ஸ் சமாச்சாரங்கள்தான் வரலாறு, மற்றதெல்லாம் கப்ஸா என்று இன்னொரு கூட்டம் குழம்பி விடக்கூடாதே!ஒரு படைப்பாளனின் நேர்மை அவன் சொன்ன செய்தியில் மட்டுமல்ல, சொல்லாமல் விட்ட சங்கதிகளிலும் இருக்கிறது. பம்பாயில் இந்து - முஸ்லீம் கலவரத்தைச் சொன்ன படைப்பாளி மணிரத்னம், கலவரத்துக்குக் காரணமான பாபர் மசூதி இடிப்பைத் திட்டமிட்டே மறைத்ததுபோல்... ‘ஜென்டில்மேன்’ முதல் ‘சிவாஜி’ வரை கல்வி வியாபாரமாகி விட்டது என புலம்பும் ஷங்கர் கூட்டணி, அது தனியார்மய - தாராளமய தாசர்களால் நேர்ந்தது என்பதைச் சொல்ல மறுப்பது போல்... கிருமி யுத்தத்தின் பூர்வ ஜென்மத் தொடர்பை ஜப்பானின் ஹிரோஷிமா - நாகசாகியில் தேடுவதற்குப் பதில் கையில் கிடைத்த புராணக் குப்பைகளில் அலசியிருக்கிறார் கமல்.கடலில் தூக்கிப் போடப்பட்ட பெருமாள் சிலையை மீண்டும் கரைக்குக் கொண்டு வரவே சுனாமி வந்ததாம். அதாவது இயற்கைச் சீற்றத்தை புராணத்துடன் முடிச்சுப் போடுகிறார். ஜெயேந்திரனைக் கைது செய்ததால்தான் சுனாமி வந்தது என சங்கர மடத் துதிபாடிகள் அப்போது சொன்னதை இந்த இடத்தில் பொருத்திப் பார்த்துக் கொள்ள வேண்டும். முன்னதற்கு வயிற்றெரிச்சல் காரணம். பின்னவருக்கு? பார்ப்பனிய விஷமத்தனமே காரணம்.ஆன்மீக முட்டாள் ரஜினியை விட, அரைகுறை அறிவாளி கமல் உண்மையில் ரொம்ப... ஆபத்தானவர். தசாவதாரத்தைக் கிழிகிழியெனக் கிழிக்கும் விமர்சகர்களில் சிலரும் கொண்டாடும் புரட்சிப் படம் ஹேராம். ஹேராமின் நாயகன் யார்? காந்தியைக் கொன்றவன். கொல்வதை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல் - அதன் வழி இந்தத் தேசத்தின் ஒட்டுமொத்த முசுலீம்களையும் கருவறுக்க வசதியாக தன்னுடைய பெயரை ஒரு முசுலீம் பெயராக்கிக் கொண்ட ஒரு ஆர்.எஸ்.எஸ். கிரிமினல். அவன் பெயர் கோட்சே. அந்தக் கோட்சேவைத்தான் நாயகனாக்கினார் கமலஹாசன். அதுசரி, ஒரு கிரிமினலை கதாபாத்திரமாக்கும் உரிமை ஒரு படைப்பாளிக்கில்லையா? இருக்கிறது. ஆனால், இது வெறும் படைப்பாளியின் உரிமை பற்றிய விசயமில்லையே. அந்தக் கதையை எந்தப் பாத்திரத்தின் வழியாக அந்தப் படைப்பாளி முன்வைக்கிறார் என்பதே கேள்வி.வேலு நாயக்கர் என்ற ரௌடியாக, பொம்பளைப் பொறுக்கியாக, மோசமான மனநோயாளியாக வந்தபோதெல்லாம் அவரின் வக்கிரங்களைக் கண்டு ரசிகர்கள் கண்களைப் பொத்திக் கொள்ளவில்லை. மாறாக கைதட்டி ரசித்தார்கள். பாத்திரத்தின் தன்மையோடு ஒன்றிப் போனார்கள். ‘சூப்பர் ஸ்டார்’ இமேஜ் உள்ள நடிகன் ஏற்கும் எந்தப் பாத்திரமும் ரசிகரிடம் அப்படித்தான் போய்ச் சேரும். கோட்சேவும் அப்படித்தான் போய் சேர்ந்திருக்கக்கூடும். ஒருவகையில் கோட்சே தரப்பு ‘நியாயங்களை’ ஹேராம் வழியாக ரசிகர்களிடம் கொண்டு சென்றார் கமல்.சிவசேனாவும், வி.எச்.பி.யும் அரசியல் தளத்தில் செய்யும் பணியை கலைத்துறையில் செய்திருக்கிறார் இந்தக் கலைஞானி. செய்ய வேண்டிய வேலையை சரியாகச் செய்திருக்கிறேனா என்று ‘பம்பாய்’ படத்தின்போது பால்தாக்கரேவின் காலில் விழுந்து கேட்டார் மருமகன் மணிரத்னம். புஷ்ஷின் அங்கீகாரத்திற்காக அலைந்து திரிந்தார் மாமா கமலஹாசன். நல்ல கலைக்குடும்பம்.அறுபது லட்சம் யூதர்களைக் கொன்ற ஹிட்லரின் நாஜிக் கொடூரத்தைப் பதிவு செய்யும் ஒரு எழுத்தாளன் அடுத்த வரியில் ‘குழந்தைகளென்றால் ஹிட்லருக்குக் கொள்ளைப் பிரியம்’ என்று ஒரு பாராட்டையும் சேர்த்து எழுத முடியுமா? படம் சொல்லும் அரசியலை ஒரு ஓரம் தள்ளி வைத்துவிட்டு, ஒரு நடிகனாக கமலின் பன்முக ஆற்றலைப் பார்க்க நம் கழுத்தைப் பிடித்து திருப்புகிறார்களே.... சிலர்! அவர்கள் முடியுமென்று சொல்கிறார்கள்.‘கடைந்தெடுத்த கிரிமினல்’ என்று உலகமே காறி உமிழ்கிறது ஜார்ஜ் புஷ் முகத்தில். ‘உலக நாயகனே வா... வா...’ என்று கும்மியடித்துக் குலவையிடுகிறார் கமலஹாசன். ஒரு மோசமான அரசியலை முன்னெடுக்கும் படைப்பில் நல்ல விசயங்களைத் தேடி பூதக் கண்ணாடியோடு கிளம்புபவன் நல்ல விமர்சகன் அல்ல. அந்த ஆளோட ரசிகர் மன்றத் தலைவன். தந்தை பெரியார் சொன்னதுபோல் இது பீயில் அரிசி பொறுக்கும் வேலை. சரி, ஒரு வாதத்துக்கு இவர்களிடம் மேலோங்கும் நடிப்பு ரசனையை அங்கீகரித்து ஒரு கேள்வி கேட்கலாம். முண்டாசு கட்டாத பாரதி... உடைவாளும், உறுமலும் இல்லாத ஒரு கட்டபொம்மன்... கோட்டும், சூட்டும், சவடாலும் தொலைத்த ஜார்ஜ் புஷ்... படுக்கையறையிலோ, கக்கூசுக்குள்ளோ... அனேகமாக அவர்கள் அப்படித்தான் இருந்திருப்பார்கள். ஒரேயொரு காட்சியில் அடையாளப்படுத்திவிட முடியுமா அவர்களை... எந்த ஒப்பனையாளரின் துணையுமின்றி? நடிகர் திலகத்துக்கே நிச்சயம் நாக்கு தள்ளி போகும். கலைஞானி என்ன... வெங்காயம்!பின்னிணைப்பு அல்ல சாட்டை:கண்டங்கள் பல தாண்டி, பல தில்லாலங்கடி வேலையெல்லாம் செய்த கோவிந்த ராமசாமி ஒரு பெண்ணிடமிருந்து தம்மாத்துண்டு டப்பியை பிடுங்க இத்தனை பாடா? அந்தப் பெண் ஒரு அக்ரகாரத்து மாமி என்பதைக் கணக்கில் கொண்டால் கலைஞானியின் ‘நூல்’ அரசியல் புலப்படும். ஆலய நுழைவு, இடஒதுக்கீடு இவையெல்லாவற்றையும் பார்ப்பனர்களிடமிருந்து நாமாகப் பிடுங்க முயற்சிக்கக்கூடாது. அவர்களாகப் பார்த்து ‘ஐயோ பாவம் பொழச்சுப் போறான்’ என கொடுத்தால் எண்சாண் உடம்பையும் ஒரு சாணாக்கிக் குறுகி பெற்றுக்கொள்ளலாம்.தில்லை வாழ் அந்தணர்களிலிருந்து தில்லி ‘எய்ம்ஸ்’ வாழ் அந்தணர்கள் வரை அதைத்தான் சொல்கிறார்கள். சுனாமியால் ஜனங்க செத்துக் கிடக்கையில் ஒருத்தனுக்கு காதல் உணர்வு கிளம்புவது குரூரமில்லையா? தந்தை மரணப்படுக்கையில் கிடந்தபோது தனயனுக்கு மூடு கிளம்பியதாக மகாத்மா வரலாறு சொல்கிறது. சத்திய சோதனையின் அந்தப் பகுதி கமலை பாடாய் படுத்தியிருக்க வேண்டும். ஹேராமிலிருந்து அவருக்கு எழுச்சியூட்டும் தருணங்களாக இவையே அமைகிறது. தொடர்ந்து இதை இப்படியே விட்டு விடுவது ஆபத்து. மாத்ரூபூதம் செத்து விட்டதால் நாராயண ரெட்டியிடம் போய் கமல் ‘கவுன்சிலிங்’ பெறலாம்.அடைத்து வைக்கப்பட்டதால் சுனாமியிலிருந்து முசுலீம்கள் தப்பித்தார்களா? குஜராத்தின் கோத்ரா கலவரத்தில் விரட்டப்பட்ட முசுலீம்கள் இன்னமும் அகதி முகாம்களில்தான் அடைபட்டிருக்கிறார்கள். அடிக்கடி நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும் அப்பூமியில் முசுலீம்களுக்கு பெருமாளே ஏற்பாடு செய்த பாதுகாப்பு என்கிறார் கமல்.தேவையில்லாமல் எதுக்குப் பத்து அவதாரங்கள்?அது, சிவாஜியின் ஒன்பது அவதாரங்களை மிஞ்ச வேண்டும் என்ற சொந்த அரிப்பால் வந்த வினை. ‘கவியரசு’ கண்ணதாசனை பின்னுக்குத் தள்ள, ‘கவிப்பேரரசு’ பட்டம் போட்டுக் கொண்ட வைரமுத்துவின் அரிப்புக்கு ஈடான அரிப்பு இது. “அந்த மேதை எங்கே; நான் எங்கே?” என்று வெளியில் கைகட்டி பவ்யம். உள்ளுக்குள்ளோ அதைத் தாண்டிக் குதிக்க சந்தர்ப்பம் தேடி அலைச்சல். அரிப்பு இருக்கும் அளவுக்கு கொஞ்சம் சரக்கும் இருந்திருந்தால் கமலின் மானம் இப்படி கப்பலேறியிருக்காது.கிளைமாக்சில் சுனாமி வந்ததற்கு உண்மையான காரணம் என்ன?“பெருமாளைக் கரையில் கொண்டு சேர்க்க!” - இது அசின் போன்ற அரை லூசு ஆத்திகக் கும்பலுக்கு. “கிருமியைக் கொல்ல” - இது பாராட்டி விழா எடுக்கக் காத்திருக்கும் கி. வீரமணி உள்ளிட்ட பகுத்தறிவுக் கோஷ்டிக்கு. உங்களுக்கு என்ன பிடிக்குமோ, அதை எடுத்துக் கொள்ளலாம். இந்த ரெண்டுகெட்டான் காட்சிக்குப்பின் நமக்கு இன்னொரு கேள்வி எழுகிறது. உலகையே அழிக்கிற கிருமியை கடல் தண்ணீர் அழித்துவிடுமென்றால், அதற்கு சுனாமியை அனுப்பத் தேவையில்லையே! மெரினா பீச்சில் வழக்கமாக வந்து போகும் ஒரு கடல் அலை போதுமே! பெருமாள் அந்தக் காலத்து ஆள். வெவரம் பத்தாம சுனாமியை அனுப்பிட்டாரு. கலைஞானியல்லவா உஷாராயிருந்து அதைத் தடுத்து நிறுத்தியிருக்க வேணும்!அது சரி, இவ்வளவு கஷ்டப்பட்டு சிலையை கரையில் சேர்த்து என்ன பிரயோஜனம்? பழையபடி சிதம்பரம் கோயிலுக்குள் அதைக் கொண்டு வைப்பது யாராம்? சிதம்பரம் தீட்சிதர்களைக் கேட்டு சீக்கிரம் அதற்கொரு ஏற்பாடு செய்ய வேண்டாமோ! அவசரப்பட்டு அடுத்த சுனாமியை பெருமாள் சாமி அனுப்பிச்சிடப் போறார்.“கடவுள் இருந்தால் நன்றாக இருக்கும்” என்ற வசனம் கடவுள் இல்லை என்பதைத்தானே சொல்கிறது? “நீ ஆம்பளைதானே?” என்ற கேள்விக்கு “அப்படி இருந்தால் நன்றாக இருக்கும்” என பதில் சொல்லும் ஜென்மம் எது? கண்டிப்பாக ஆணுமில்லை, பெண்ணுமில்லை; இடைப்பட்ட ஏதோவொண்ணு. “இருக்கிறாரா, இல்லையா?” என்ற கேள்விக்கு ‘இருக்கு’, ‘இல்லை’ என்ற ஒற்றைச் சொல் மட்டுமே பதிலாக இருக்க முடியும். மற்றவையெல்லாம் பகுத்தறிவு முகமூடிக்குப் பின்னால் பதுங்கிக் கிடக்கும் மௌடீகங்களே. “கடவுளே, உனக்குக் கண்ணு அவிஞ்சு போச்சா?” எனப் புலம்பும் பக்தனின் குமுறலில் வெளிப்படுவது கடவுள் மறுப்புதானென்றால் சந்தேகமே வேணாம்... கமலின் வாயிலிருந்து தெறிக்கும் ஒவ்வொரு சொல்லும் பகுத்தறிவுப் பாசறையில் புடம் போட்டவை என்று ஒத்துக் கொள்கிறோம். புகழாரம் இன்னும் கொஞ்சம் நீண்டு “வசனங்களை எழுதியவர் கமலா? பெரியாரா?” என பட்டிமன்றம் நடத்தாத வரைக்கும் நாம் தப்பித்தோம்.- தீசுமாசு டி சில்வா (theesmas@gmail.com)